தாய்ப்பால்: வேலை இடங்கள் அதிக ஆதரவளிக்க வேண்டும்

1 mins read
f28f4451-46d9-407d-bd57-ff99bb786113
தாய்­மார்­கள் முன்பை­விட அதிக காலத்­திற்கு தாய்ப்­பால் கொடுக்­கி­றார்­கள் என்­ப­தும் தெரி­ய­வந்து உள்ளது. படம்: பிக்ஸாபே -

சிங்­கப்­பூ­ரில் முன்­பை­விட அதி­க­மான மாதர்­கள் தங்­கள் பிள்­ளை ­க­ளுக்­குத் தாய்ப்­பால் கொடுக் கிறார்­கள். ஆகை­யால் அதற்கு வேலை இடங்­கள் ஆத­ரவு அளிக்க வேண்­டும் என்று சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம் வலியுறுத்தி உள்­ளது.

தங்­கள் பிள்­ளை­க­ளுக்குத் தாய்ப்­பால் கொடுக்­கும் அன்னை­யர் முன்பை விட அதிகம் என கேகே மகளிர், சிறார் மருத்­து­வ­மனை, தேசிய பல்கலைக்­க­ழக மருத்து­வ­மனை, சிங்­கப்­பூர் பொது மருத்துவ மனை உள்­ளிட்ட பிர­சவ மருத்­துவமனை­களும் கூறுகின்­றன.

அதோடு, தாய்­மார்­கள் முன்பை­விட அதிக காலத்­திற்கு தாய்ப்­பால் கொடுக்­கி­றார்­கள் என்­ப­தும் தெரி­ய­வந்து உள்ளது. 2018ஆம் ஆண்­டில் மாதர்­, தங்கள் பிள்­ளை­க­ளுக்­குச் சரா­சரி­யாக 8.1 மாதம் வரை தாய்ப்­பால் கொடுத்­தார்­கள். அந்த அளவு 2022ல் 11.8 மாதம் வரை என்று ஆகி இருக்­கிறது.

இந்த வாரி­யம், 2021/2022ல் தேசிய அள­வில் ஆய்வு நடத்­தியது. 97% அன்­னை­யர் தாய்ப்­பால் கொடுப்­ப­தாக தெரிந்­தது.

ஆறுமாதக் குழந்­தை­க­ளைப் பார்க்­கை­யில், 10ல் 4 பிள்­ளை­களுக்­குத் தாய்ப்­பால் கொடுக்­கப்­ப­டு­கிறது. இந்த அளவு 2011ஆம் ஆண்­டின் ஆய்­வில் 10க்கு 1 ஆக இருந்­தது.

பிள்­ளை­க­ளுக்­குத் தாய்ப்­பால் கொடுப்­பது மிக­வும் சிறந்­தது, அது அவ­சி­ய­மான ஒன்று என்று வல்­லு­நர்­கள் வலி­யு­றுத்­துகி­றார்­கள். என்­றா­லும் வேலை பார்க்­கும் அன்­னை­யர்­களில் பல­ரும் வேலை இடத்­தில் பிள்­ளை­களுக்குத் தாய்ப்­பால் கொடுப்­பதில் பல சங்­க­டங்­களை எதிர்­நோக்­கு­வ­தா­கத் தெரி­கிறது.

இதுபற்றி கருத்து தெரி­வித்த வாரி­யம், வேலை இடத்­தில் அன்­னை­யர் தங்­கள் பிள்­ளை­களுக்­குத் தாய்ப்­பால் கொடுக்க தேவை­யான வசதிகளை முத லாளி­கள் ஏற்­ப­டுத்­தித்­தர வேண்டும் என வலி­யு­றுத்­தி­யது.