தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆய்வு: அடுத்த 10 ஆண்டுகளில் காட்டுப்பன்றிகள் தீவின் பல பகுதிகளிலும் அதிகரிக்கக்கூடும்

1 mins read
e250a3c2-0044-4609-a82a-30930993ee13
-

தெற்கு காட்­டுப் பகு­தி­க­ளைத் தவிர்த்து, சிங்­கப்­பூர் காட்­டுப்­ப­கு­தி­களில் காட்­டுப்­பன்­றி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளன. ஆனால், அடுத்த 10 ஆண்­டு­களில் அவை தெற்கு காட்­டுப் பகு­தி­க­ளி­லும் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று அண்மைய ஆய்வு ஒன்­றில் தெரி­ய­வந்­துள்­ளது.

'கன்­சர்­வே­ஷன் சைன்ஸ் அண்ட் பிராக்­டிஸ்' எனும் சஞ்­சி­கை­யில் பிப்­ர­வரி 16ஆம் தேதி அந்த ஆய்­வ­றிக்கை பிர­சு­ரிக்­கப்­பட்­டது.

அந்த ஆய்­வின்­படி, இரு­பது ஆண்­டு­க­ளுக்­குள் காட்­டுப்­பன்றி­க­ளின் எண்­ணிக்கை பர­வ­லாக அதி­க­ரித்­தது. சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம், வாஷிங்­டன் பல்­க­லைக்­க­ழ­கம் உள்­ளிட்ட 10க்கும் மேற்­பட்ட அமைப்­பு­களைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் அந்த ஆய்­வில் ஈடு­பட்­ட­னர்.

உண்ண உணவு அதி­க­மாக இருப்­பது, காட்­டுப்­பன்­றி­க­ளைக் கொன்று, தின்­னும் உயி­ரி­னங்­கள் குறைந்­தி­ருப்­பது, சிங்­கப்­பூ­ரில் வன­வி­லங்­கு­களை வேடை­யா­டு­வ­தற்கு முழுத் தடை நடப்­பில் இருந்து வரு­வது ஆகி­யவை காட்டுப்­பன்­றி­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்க கார­ணங்­களாக உள்­ளன.

மனி­தர்­களும் வன­வி­லங்­கு­களும் ஒன்­றாக வாழ்­வதை ஊக்கு­விக்­கும் முயற்­சி­க­ளின் ஒரு பகு­தி­யாக, காட்­டுப்­பன்­றி­களுக்கு நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ உணவு வழங்­கு­வதைத் தவிர்க்­கு­மாறு தேசிய பூங்­காக் கழ­கம் அறி­வு­றுத்­து­கிறது. இல்­லா­விட்­டால், உண­வுக்­காக காட்­டுப்­பன்­றி­கள் மனி­தர்­களை நாடி வரும்.

அக்­கம்­பக்க குடி­யி­ருப்­புப் பகுதி­க­ளுக்­குள் காட்­டுப்­பன்­றி­கள் நுழை­வ­தைத் தடுக்க அர­சாங்க அமைப்­பு­கள், சொத்து மேம்­பாட்­டா­ளர்­க­ளு­டன் சேர்ந்து தேசிய பூங்­காக் கழ­கம் பணி­யாற்றி வரு­வ­தாக கழ­கத்­தின் வன­வி­லங்கு நிர்­வாக குழும இயக்­கு­நர் டாக்­டர் ஏட்­ரி­யன் லூ கூறி­னார்.