தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'சமத்துவமின்மையை கவனிக்காவிடில் இரு பிரிவுகள் உருவாகலாம்'

2 mins read
f6cbbfdf-901b-40dd-9332-be56e78b658b
-

சமூ­கப் பிரி­வி­னை­யை­யும் இரண்டு சிங்­கப்­பூர் உரு­வா­வ­தை­யும் தவிர்க்க, இருதரப்பு சிங்கப்பூரர்களுக்கு இடையில் வளங்களை முறையாகப் பகிர்ந்தளிப்பது அவசியம் என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் பிரித்­தம் சிங் (படம்) குறிப்­பிட்டு உள்­ளார்.

அர­சாங்­கக் கொள்­கை­க­ளின் மூலா­தா­ர­மாக அது விளங்க வேண்­டும் என்­றும் கூறிய அவர், சமத்­து­வ­மின்­மை­யைச் சமா­ளிக்கத் தேவை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்படாவிடில் அதி­கம் சம்பா­திப்­போ­ருக்கு ஏற்ற ஒரு சிங்­கப்­பூ­ரும் பெரும்­பான்­மை­யான சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கான ஒரு சிங்­கப்­பூ­ரும் உரு­வா­கி­வி­டும் அபா­யம் இருப்­ப­தா­க­வும் அவர் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

இரு சிங்­கப்­பூர் என்­னும் சூழ­லில் சமூக ஒற்­றுமை என்­பது கடி­ன­மான ஒன்­றாக ஆகி­வி­டும் என்­றார் அவர்.

பாட்­டா­ளிக் கட்­சித் தலை­

வ­ரான திரு சிங், வர­வு­செ­ல­வுத் திட்ட விவா­தத்­தில் பங்­கேற்­றுப் பேசி­னார்.

இந்த ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத் திட்­டம், வசதி படைத்த வர்­க­ளி­டம் பணத்­தைப் பெற்று வச­தி­யற்­றோ­ருக்­குத் தரக்­கூ­டிய 'ராபின் ஹூட் பட்­ஜெட்' என்று விமர்­சிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அதில் தமக்கு உடன்­பா­டில்லை என்­றும் அவர் கூறி­னார்.

இரு பிரிவுகளாக சமூகம் உருவாகாமல் காக்க, தேவை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட வேண்­டும் என்­றார் திரு சிங்.

"தேவை­யா­ன­வற்­றை போது­மான அள­வுக்­குச் செய்­யா­வி­டில் இரு சிங்­கப்­பூர்­கள் உரு­வா­கி­

வி­டுமோ என்று இது­வரை நிலவி வந்த அச்­சு­றுத்­தல் உண்­மை­யா­கி­ வி­ட­லாம்," என்று கூறி­னார்.

இரு சிங்­கப்­பூர்­கள் என்­பதை விவ­ரித்த அவர், "அதிக சம்­ப­ளம் பெறு­வோ­ரை­யும் அதற்­கான வாய்ப்­பு­க­ளை­யும் பெற்­றி­ருக்­கக்­கூ­டி­ய­தா­க­வும் ஒரு பொரு­ளி­யல் மைய­மாக உல­கத்­தோடு தொடர்­பு­டை­ய­தா­க­வும் ஒரு சிங்­கப்­பூர் இருக்­கும்," என்­றார்.

"அதே­நே­ரம் பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­கள் வசிக்­கக்­கூ­டி­ய­தாக மற்­றொரு சிங்­கப்­பூர் இருக்­கும்.

"சமூ­க முன்னேற்றம் மெது­வடையும் என்னும் கருத்தைக் கொண்டதாக, அதிக வீட்டு விலை­யுடன் தொடர்புடையதாக அந்த இரண்­டா­வது சிங்­கப்­பூர் இருக்­கும்," என்­றும் திரு சிங் எடுத்­து­ரைத்­தார்.

"பல்­லாண்­டு­க­ளுக்கு முன்­னர் இருந்­த­தைப்­போல வீவக வீட்டு உரி­மை­யா­ளர்­கள் கொண்­டோ­மி­னிய வீட்­டுக்கோ தரை வீட்­டுக்கோ முன்­னே­றக்­கூ­டிய நிலை தற்­போது இல்லை. இதர நாடு

க­ளைப்­போல் இல்­லா­மல், கார் என்­பது பெரும்­பா­லான மக்­க­ளுக்கு கைகெட்டா ஆடம்­ப­ரம் என்ற நிலை­யும் இங்கு உள்­ளது.

"கடந்த காலங்­களில், பள்­ளிப்­ப­டிப்பை சிறப்­பா­கச் செய்­யா­விட்­டா­லும் கடி­ன­மாக உழைத்து செல்­வந்­த­ரா­கக் கூடிய நிலைமை இருந்­தது.

"ஆனால், பள்­ளிப்­ப­டிப்­பில் தேறா­மல், கஷ்­டப்­பட்டு உழைத்­தா­லும் வெற்­றி­யும் செல்வ வள­மும் கிடைக்­கா­மல் போக­லாம் என்­பதே தற்­போ­தைய நிலைமை," என்­றார் அவர்.

விலை உயர்ந்த சொத்­து­

க­ளுக்­கும் ஆடம்­பர வாக­னங்­

க­ளுக்­கும் வரி உயர்த்­தப்­படும் என்ற வர­வு­செ­ல­வுத் திட்ட அறி­விப்பை பாட்­டா­ளிக் கட்சி ஆத­ரிப்­ப­தாக திரு சிங் கூறி­னார்.

அதிக சம்­ப­ளம் ஈட்­டு­வோர், விகி­தாச்­சார அடிப்­ப­டை­யில் அதிக வரி செலுத்­தும்­போது படிப்­ப­டி­யாக முன்­னே­றக்­கூ­டிய சமூ­கத்தை உரு­வாக்­க­லாம் என்­னும் இந்த யோச­னையை தமது கட்சி ஆத­ரிப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.