வழக்கநிலைக்கு திரும்பிய வடக்கு-தெற்கு ரயில் சேவை

வழக்கநிலைக்கு திரும்பிய வடக்கு-தெற்கு ரயில் சேவை

2 mins read
bfb416e2-e8e3-48a3-a3bc-5534300e545e
-

மூன்று வாரங்களில் மூன்றாம் முறை தடை; எஸ்எம்ஆர்டி வருத்தம்

வடக்கு-தெற்கு ரயில்­பா­தை­யில், நேற்­றுக் காலை பய­ணி­கள் ஏறக்­கு­றைய 25 நிமி­டங்­கள் வரை­யிலான தாம­தத்­தால் சிர­மப்­பட்­ட­னர்.

உட்­லண்ட்ஸ் ரயில் நிலை­யத்­திற்­கும் அங் மோ கியோ ரயில் நிலை­யத்­திற்­கும் இடை­யில் ரயி­லில் ஏற்­பட்ட கோளாற்­றால் இவ்­வாறு நேர்ந்­தது.

இந்­தப் பாதை­யில் மூன்று வாரங்­களில் மூன்­றா­வது முறை­யாக இவ்­வாறு ரயில் சேவை தாம­த­மா­னது.

முன்­ன­தாக இம்­மா­தம் 6ஆம் தேதி ரயில் தடத்­தில் ஏற்­பட்ட கோளாற்­றால் ரயில் சேவை பாதிக்­கப்­பட்­டது. பின்­னர் இம்­மா­தம் 8ஆம் தேதி, ரயி­லின் தடத்தை மாற்­றி­விட உத­வும் விசைக்­க­ரு­வி­யில் கோளாறு ஏற்­பட்­ட­தால் ரயில் சேவை தாம­த­மா­னது.

வடக்கு-தெற்கு ரயில் பாதை­யில் சேவை வழங்­கும் எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம், நேற்­றுக் காலை 10.10 மணி­ய­ள­வில் சேவை தாம­த­மா­னது குறித்து அறி­வித்­தது.

மரினா சவுத் பியரை நோக்­கிச் செல்­லும் பாதை­யில், உட்­லண்ட்­சில் இருந்து ஈசூன் செல்­வ­தற்­குக் கூடு­த­லாக 15 நிமி­டம் பிடிக்­கும் என்று பய­ணி­க­ளுக்­குத் தெரி­விக்­கப்­பட்­டது.

பின்­னர், உட்­லண்ட்ஸ் ரயில் நிலை­யத்­திற்­கும் அங் மோ கியோ நிலை­யத்­திற்­கும் இடையே பயண நேரம் 25 நிமி­டங்­கள் கூடு­த­லா­கும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

நேற்று முற்­ப­கல் 11.10 மணி­ய­ள­வில் ரயில் சேவை படிப்­ப­டி­யாக வழக்­க­நி­லைக்­குத் திரும்­பு­வ­தாக நிறு­வ­னம் டுவிட்­ட­ரில் பதி­விட்­டது.

அதைத் தொடர்ந்து 11.15 மணிக்கு, சேவை வழக்க நிலைக்­குத் திரும்­பி­ய­தாக அறி­விக்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட நேரத்­தில் உட்­லண்ட்ஸ் ரயில் நிலை­யத்­திற்­கும் அங் மோ கியோ ரயில் நிலை­யத்­திற்­கும் இடையே இல­வ­சப் பேருந்­துச் சேவைக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

ஈசூன் நிலை­யத்­தில் ரயி­லில் ஏற்­பட்ட கோளாற்­றால் சேவை இவ்­வாறு பாதிக்­கப்­பட்­ட­தாக, நேற்­றுக் காலை 11.30 மணி­ய­ள­வில் எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டது.

ஈசூன் நிலை­யத்­தில் பய­ணி­கள் அந்த ரயி­லில் இருந்து பாது­காப்­பாக வெளி­யே­றி­ய­தா­க­வும் அது கூறி­யது. பின்­னர் அந்த ரயில் பரி­சோ­த­னைக்­காக பழுது பார்க்­கு­மி­டத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­பட்­டதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது.

அதி­லி­ருந்த பய­ணி­கள் தாம்­சன்-ஈஸ்ட் கோஸ்ட் உள்­ளிட்ட மாற்­றுப் பாதை­களில் செல்­லும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர்.

பய­ணி­க­ளுக்கு ஏற்­பட்ட சிர­மத்­திற்கு நிறு­வ­னம் வருத்­தம் தெரி­வித்­தது.