தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெம்பனிஸ் விரைவுச்சாலை விபத்தில் மாண்ட இளம்பெண் அண்மையில் திருமணமானவர்

2 mins read
efcb98db-262f-436b-9e7e-1971a7aebb56
-

தீவு விரை­வுச்­சா­லையை நோக்­கிச் செல்­லும் தெம்­ப­னிஸ் விரை­வுச்­சா­லை­யில் கடந்த திங்­கட்­கி­ழமை காலை இரு மோட்­டார் சைக்­கிள்­களும் சிறிய ரகப் பேருந்­தும் மோதிக்­கொண்­ட­தில் மாது ஒரு­வர் மாண்­டார்.

யாஸ்­மின் அப்­துல்லா எனும் அந்த 26 வய­துப் பெண்­ணுக்­குத் திரு­ம­ண­மாகி மூன்று வாரங்­கள் ஆகின்­றன.

கண­வர் மும­கது ஸாகித் அப்­துல் கஃபாருக்கு வயது 29. மனை­வி­யைத் தனது மோட்­டார் சைக்­கி­ளில் அன்­றா­டம் காலை அவர் பணி­பு­ரி­யும் பல் மருந்­த­கத்­தில் விட்­டுச் செல்­வதை அவர் வழக்­க­மா­கக் கொண்­டி­ருந்­தார்.

திங்­கட்­கி­ழமை நடந்த விபத்­தில் திரு ஸாகித் உயிர்­பி­ழைத்த நிலை­யில் மனைவி யாஸ்­மின் உயி­ரிழ்ந்­தார்.

இணை­யப் பாது­காப்­புத் துறை­யில் பணி­பு­ரி­யும் ஸாகித்­தின் உடல்­நிலை சீராக இருப்­ப­தாக அவ­ரது சகோ­தரி ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டுள்­ளார். விபத்­தில் பலத்த காய­ம­டைந்த அவ­ருக்­குப் பல்­வேறு அறுவை சிகிச்­சை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

யாஸ்­மி­னின் தந்­தை­யான 64 வயது அப்­துல்லா சன்­யார், சென்ற மாதம் 29ஆம் தேதி நடை­பெற்ற திரு­ம­ணம் தனது மக­ளின் வாழ்­வில் இனிய தரு­ணம் என்­றும் திரு­மண வாழ்வை அவர் மிக­வும் விருப்­பத்­து­டன் எதிர்­நோக்­கி­ய­தா­க­வும் பெரித்தா ஹரி­யான் நாளேட்­டி­டம் தெரி­வித்­தார்.

திரு­ம­ணத்­துக்­குப் பிற­கு கல்­வி­யைத் தொட­ர­வும் வீடு வாங்­க­வும் யாஸ்­மின் ஆர்­வம் கொண்­டி­ருந்­தார்.

பட்­ட­யக் கல்வி முடிந்த பிறகு உடல்­ந­லக் கோளாற்­றால் அவ­ரால் மேற்­கல்­வி­யைத் தொடர இய­ல­வில்லை என்­றும் தனது மகள் எப்­போ­தும் சிரித்த முகத்­து­டன் வளைய வரு­ப­வர் என்­றும் தந்தை அப்­துல்லா கூறி­னார்.

அன்­புக்­கு­ரிய தனது தங்­கை­யின் மறை­வால் அனைத்­தை­யும் இழந்­த­து­போல் உணர்­வ­தா­கக் கூறி­னார் யாஸ்­மி­னின் அக்கா அலியா ஃபட்­டின்.

விபத்­தின் தொடர்­பில் சிறிய ரகப் பேருந்தை ஓட்­டிய 54 வயது ஆட­வர் சம்பவ தினத்தன்றே கைது செய்­யப்­பட்­டார்.

விசா­ரணை தொடர்­கிறது.