தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

4,525 இதயச் செயலிழப்புச் சம்பவங்கள்; முதலுதவி கிடைத்தது

2 mins read
c7e270f8-9064-4b1f-8a10-41024036ce66
-

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் 'மைரெஸ்­பாண்­டர்ஸ' செய­லி­யில் தொண்­டூ­ழி­யர்­க­ளா­கப் பதிவு செய்­து­கொண்­ட­வர்­கள் கடந்த ஐந்து ஆண்­டு­களில் பல உத­வி­க­ளைச் செய்­துள்­ள­னர். அவர்­கள் கையாண்ட 7,650 சம்­ப­வங்­களில் பாதி, இத­யச் செய­லி­ழப்­பு­டன் தொடர்­பா­னவை என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் நாடாளுமன்ற எழுத்துபூர்வ பதிலில் தெரி­வித்­தார். 2018ஆம் ஆண்­டி­லி­ருந்­து கடந்த ஆண்டு வரை அவர்­கள் இத­யச் செய­லி­ழப்­பால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு முத­லு­தவி வழங்­கி­னர். சிறு தீச்­சம்­ப­வங்­களை எதிர்­கொள்­ள­வும் அவர்­கள் உத­வி­னர்.

யாரா­வது ஒரு­வர் இத­யச் செய­லி­ழப்­பால் பாதிக்­கப்­பட்­டாலோ அல்­லது சிறு தீச்­சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தாலோ சம்­பவ இடத்­தி­லி­ருந்து 400 மீட்­டர் தூரத்­துக்­குள் இருக்­கும் சமூக 'ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்­டர்ஸ்' தொண்­டூ­ழி­யர்­

க­ளுக்கு உட­ன­டி­யா­கத் தக­வல் தெரி­விக்­கப்­படும்.

அவ­ச­ர­நிலை ஏற்­பட்­டால் அதை உட­ன­டி­யாக எதிர்­கொள்­ளும் வகை­யில் அடுத்த சில ஆண்­டு­களில் குடி­யி­ருப்­புப் பகு­தி­க­ளி­லும் தனி­யார் வாக­னங்­க­ளி­லும் கூடு­தல் தீய­ணைப்­புக் கரு­வி­களும் இத­யச் செய­லி­ழப்­பால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் இத­யத்தை மீண்­டு­ம் துடிக்க வைக்க உத­வும் சாத­னங்­களும் பொருத்­தப்­படும் என்று திரு சண்­மு­கம் கூறி­னார்.

இரண்டு வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­க­ளுக்கு ஒரு தீய­ணைப்­புக் கருவி என்ற அணு­கு­முறை நடப்­புக்கு வரும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. தீய­ணைப்­புக் கரு­வி­கள் மின்­தூக்­கித் தளத்­தில் பொருத்­தப்­பட்­டி­ருக்­கும்.

இது­தொ­டர்­பாக அடுத்த ஐந்து ஆண்­டு­களில் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம், நகர மன்­றங்­கள், தெமா­செக் அற­நி­று­வ­னம் ஆகி­ய­வற்­று­டன் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை இணைந்து செயல்­படும் என்று அமைச்­சர் சண்­மு­கம் தெரி­வித்­தார். இத­யச் செய­லி­ழப்­பால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் இத­யத்தை மீண்­டும் துடிக்க வைக்க உத­வும் கரு­வி­க­ளைப் (ஏஇடி) பொறுத்­த­வரை, நகர்ப்­பு­றங்­களில் 250 மீட்­டர் தூரத்­துக்கு ஒரு கருவி பொருத்­து­வதே சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் இலக்கு என்­றார் அவர்.

சேவ் எ லைஃப் திட்­டத்­தின்­கீழ் வீவக குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­கள், கூட்­டு­ரிமை குடி­யி­ருப்­பு­கள் ஆகி­ய­வற்­றில் உள்ள மின்­தூக்­கித் தளங்­களில் 51,000 ஏஇடி கரு­வி­களை சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை பொருத்­தி­யி­ருப்­ப­தாக திரு சண்­மு­கம் கூறி­னார்.

பூங்­காக்­கள், தனி­யார் மற்­றும் பொது இடங்­க­ளி­லும் கூடு­தல் ஏஇடி கரு­வி­க­ளைப் பொருத்த மக்­கள் கழ­கம், தேசிய பூங்­காக் கழ­கம் ஆகி­ய­வற்­று­டன் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை இணைந்து செயல்­படும் என்­றார் அமைச்­சர் சண்­மு­கம்.

இவ்­வாண்டு சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் ஏஇடி ஆன் வீல்ஸ் திட்­டத்­தில் சிங்­போஸ்ட் நிறு­வ­ன­மும் சேரு­வ­தாக அமைச்­சர் சண்­மு­கம் அறி­வித்­தார். சிபிஆர் எனும் இதய இயக்க மீட்பு சிகிச்சை செய்­ய­வும் ஏஇடி கரு­வி­க­ளைப் பயன்­ப­டுத்­த­வும் கற்­றுக்­கொள்­ளும்­படி பொது­மக்­களை திரு சண்­மு­கம் கேட்­டுக்­கொண்­டார். அத்­து­டன் தீய­ணைப்பு, முத­லு­த­வித் திறன்­

க­ளை­யும் பொது­மக்­கள் கொண்­டி­ருப்­பது நல்­லது என்று அவர் கூறி­னார்.