சிங் மிங் விழா தொடர்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

சிங் மிங் விழா தொடர்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள்

1 mins read
fcf28c15-7f63-4a51-a979-31709c810f14
-

இந்த ஆண்டு சிங் மிங் விழா ஏப்­ரல் 5ஆம் தேதி இடம்­பெற இருக்­கிறது.

அத­னை­யொட்டி சில நாள்­களில் அர­சாங்­கம் நிர்­வ­கிக்­கும் இடு­கா­டு­கள், அஸ்தி காப்­ப­கங்­கள் ஆகிய பகு­தி­க­ளுக்­குச் செல்­ல­வேண்­டா­மென தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் பொது­மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

சுவா சூ காங் இடு­காடு, சுவா சூ காங் அஸ்தி காப்­ப­கம், மண்­டாய் அஸ்தி காப்­ப­கம், ஈசூன் அஸ்தி காப்­ப­கம் ஆகி­ய­வற்­றில் கூட்ட நெரி­சல் அதி­க­மாக இருக்­கு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

குறிப்­பாக, மார்ச் 18ஆம் தேதி முதல் ஏப்­ரல் 16 வரை­யி­லான வார இறு­தி­களில் அதி­க­மா­னோர் அங்கு செல்­லக்­கூடும். அஸ்தி காப்­ப­கங்­களில் கூட்­டக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் நடப்­பில் இருக்­கும். அவை 24 மணி நேர­மும் திறந்­தி­ருக்­கும் என்­று வாரி­யம் தெரி­வித்­தது.

சுவா சூ காங் இடு­காட்­டில் உள்ள அஸ்தி தெளிப்­ப­தற்­கான 'அமை­திப் பூங்கா' பொது­மக்­க­ளுக்கு மூடப்­படும். முன்­ப­திவு செய்­தோர் மட்­டுமே அங்கு செல்­ல­லாம்.

மண்­டாய், சுவா சூ காங் அஸ்தி காப்­ப­கங்­களில், குறிப்­பிட்ட சில நேரங்­களில் வாக­னத்தை நிறுத்­த­வும் முன்­ப­திவு செய்­தல் அவ­சி­யம்.

காத்­திப் ரயில் நிலை­யத்­திற்கு அருகே வாக­னத்தை நிறுத்­தி­விட்­டு அஸ்தி காப்பகங்களுக்குச் செல்ல பேருந்­துச் சேவைக்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மேல்­வி­வ­ரங்­க­ளுக்கு வாரி­யத்­தின் இணை­யத்­த­ளத்தை நாட­லாம்.