பிடோக் பேருந்து நிலையம் அருகே உரிமமின்றி மெல்லிழைத் தாள் விற்றவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை கடிதங்களை விடுத்துள்ளனர்.
மெல்லிழைத் தாள் விற்றவர்களில் சிலர் ஒன்றாக வேனில் வந்துபோனதைப் பார்த்ததாக பிடோக் வாசிகள் சிலர் தம்மிடம் கூறினர் என்று ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் கியட் ஹாவ் நேற்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தார். அவர்களுக்குப் போதுமான உதவி கிடைக்கிறதா என்று சில குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்தனர் என்றார் திரு டான்.
பிடோக் எம்ஆர்டி நிலையம் அருகே மெல்லிழைத் தாள் விற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் ஒருவர் "பிச்சை எடுத்ததாகவும்" சமூக ஊடகங்களில் இணையவாசி ஒருவர் கூறியதை அடுத்து இணையத்தில் அது பெரும் விவாதமானது.
ஒரு காலை இழந்த ஆடவர், அறிவுத் திறன் குறைபாடுள்ள இளையர், கூன் விழுந்த மூதாட்டி உள்ளிட்டோரை 8வோர்ல்டு எனும் உள்ளூர் ஊடகம் பேட்டிகண்டது. அவர்கள் யாரும் அரசாங்க உதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்று ஊடகம் கூறியது.

