இரு இடங்களில் இறந்துகிடந்த இரு ஆடவர்கள்

இரு இடங்களில் இறந்துகிடந்த இரு ஆடவர்கள்

1 mins read
58d773f5-c0e8-4e43-9924-b0f85f1219e1
-
multi-img1 of 2

டக்கோட்டா கிர­செண்­டில் உள்ள வீவக புளோக் 58ன் படிக்­கட்டில் 32 வயது ஆட­வர் வெள்ளிக்­கிழமை இறந்துகிடந்­தார்.

அங்கு அவர் அசை­வற்­றுக் கிடந்­த­தா­க­வும் அவர் மரண மடைந்துவிட்­ட­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை மருத்­துவ அதி­காரி தெரி­வித்­த­தா­க­வும் காவல்­துறை கூறி­யது.

தொடக்க புலன்­வி­சா­ர­ணை­களைப் பார்க்­கை­யில், அந்த மர­ணத்­தில் சூது இருப்­ப­தாக சந்­தே­கம் எழ­வில்லை என்­றும் காவல்­துறை தெரி­வித்­தது.

மர­ண­ம­டைந்­த­வர் அந்­தப் பகு­தி­யில் வசிப்­ப­வர் என்­றும் ஆயு­தம் எது­வும் சம்­பவ இடத்­தில் காணப்­ப­ட­வில்லை என்­றும் தெரி­ய­வந்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டது.

அந்­தச் சம்­ப­வத்தை இயற்கைக்கு மாறான மர­ணம் என்று காவல்­துறை வகைப்­படுத்தி இருக்­கிறது. புலன்­விசாரணை தொடர்­கிறது.

இத­னி­டையே, பீச் ரோட்­டில் இருக்­கும் கோல்­டன் மைல் காம்ப்­ளக்ஸ் கார்­பேட்­டை­யில் 70 வயது ஆட­வர் சனிக்­கி­ழமை காலை­யில் அசை­வின்றி கிடந்­தார்.

அவ­ரைப் பரி­சோ­தித்த சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை மருத்­துவ அதி­காரி, அந்த ஆட­வர் மர­ண­ம­டைந்­து­விட்­ட­தாக தெரி­வித்­தார் என்று காவல்­துறை குறிப்­பிட்டது. அந்­தச் சம்­ப­வத்தை இயற்கைக்கு மாறான மர­ணம் என்று காவல்­துறை வகைப்­படுத்தி இருக்­கிறது.

மைக்­கல் என்ற அந்த 70 வயது ஆடவர் கொஞ்ச நாள்­களா­கவே உடல்­ந­ல­மின்றி இருந்­த­தாக வும் அவரின் கால்கள் அடிக்கடி வீங்கிவிடும் என்றும் தெரி­கிறது.

ஆட­வ­ரின் மர­ணத்­தில் சூது இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை என்றும் காவல்­துறை கூறி­யது.