தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆகாயப் படைக்கு மேலும் 8 எஃப்-35பி போர் விமானங்கள்: 'அனைத்தையும் ஆராய்ந்து மதிப்பிட்டு எடுக்கப்பட்ட முடிவு'

1 mins read
a176938d-cec3-484d-9965-6c9558ddd730
-

தற்­காப்பு அமைச்சு, 2030ஆம் ஆண்­டுக்­குள் மேலும் எட்டு எஃப்-35பி ரக போர் விமா­னங்­களை வாங்­கும். இதன் காரண மாக அவற்­றின் மொத்த எண்­ணிக்கை 12 ஆக உய­ரும்.

அந்த ஐந்­தாம் தலை­முறை ஜெட் போர் விமா­னங்­க­ளு­டன், சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகா­யப் படை தனது போர் அனு­கூ­லங்­களை மேலும் கூர்­தீட்­டும் என்று தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென், நாடா­ளு­மன்­றத்­தில் வெள்­ளிக்­கிழமை நடந்த தனது அமைச்­சின் வர­வு­செ­ல­வுத் திட்ட விவா­தத்­தின்­போது தெரி­வித்­தார்.

உல­கின் ஆக நவீன எஃப்-35பி ரக விமா­னங்­கள் கார­ண­மாக ஆகா­யப்­ப­டை­யின் ஆற்­றல் மட்டுமன்றி, சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­க­ளின் ஆற்­ற­லும் மேம்­படும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

ஆகா­யப்­ப­டை­யின் எஃப்-16 ரக போர் விமா­னங்­கள் 2030களின் நடுப்­ப­குதி முதல் கட்­டம்­கட்­ட­மாக ஓய்­வு­பெறவிருப்­பதை அவர் சுட்­டி­னார். வலு­வான தற்­காப்­புச் செல­வி­னத்­திற்­குப் பல ஆண்டு கால­மாக நிலை­யான, வலு­வான ஆத­ரவு அளித்­து­வ­ரும் நாடா­ளு­மன்­றத்­திற்கு அமைச்­சர் நன்றி கூறி­னார்.

இத­னி­டையே, மேலும் எட்டு எஃப்-35பி போர் விமா­னங்­களை வாங்­கு­வது என்ற முடிவு, இம்மி பிச­கா­மல் எல்­லா­வற்­றை­ய­யும் பரந்த அள­வில் அலசி ஆராய்ந்து மதிப்­பிட்டு அதற்­குப் பிறகு எடுக்­கப்­பட்ட ஒன்று என்று தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

அந்த முடிவு, தரு­விப்பு ஆணை­கள் அதி­க­மாகி, அதனால் செலவு குறை­யக்­கூடிய ஒரு நல்ல வாய்ப்பைப் பயன்­படுத்­திக்­கொண்டு, காலத்­திற்கு ஏற்ற சரி­யான ஒரு நேரத்­தில் எடுக்­கப்­பட்­ட­தா­க­வும் அமைச்சு விளக்­கி­யது.