நள்ளிரவில் நிற்காமல் வேனை ஓட்டிச் சென்றவர் பிடிபட்டார்

நள்ளிரவில் நிற்காமல் வேனை ஓட்டிச் சென்றவர் பிடிபட்டார்

1 mins read
92b6c38d-ec90-41ee-a3c4-5476c36d5e5a
-

போக்­கு­வ­ரத்து காவல்­துறை அதி­காரிகள், நள்­ளி­ரவு நேரத்­தில் 21 வயது வாகன ஓட்டுநர் ஒரு­வரை கார்களில் விரட்­டிப் பிடித்துக் கைது செய்­தனர்.

இந்த விரட்­டல் சம்­ப­வம் சனிக்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணிக்கு கிராஞ்­சி­யில் இருந்து சுவா சூ காங் வரை நிகழ்ந்­தது.

போக்­கு­வ­ரத்து காவல்­துறை அதி­காரி ஒரு­வர், கிராஞ்சி ரோட்டை நோக்கி கிராஞ்சி லூப்­பில் சென்றுகொண்டு இருந்­தார். அப்­போது நள்­ளி­ரவு 12 மணி இருக்­கும்.

அந்த நேரத்­தில் அந்த வழி­யில் வந்த வேன் ஒன்றைச் சோத­னை­யிட வேண்­டும் என்று சொல்லி அதை நிறுத்­தும்­படி அதை ஓட்­டி­வந்­த­வ­ருக்கு அந்த அதி­காரி உத்­த­ர­விட்­டார்.

ஆனால் வேன் வாகனத்தை ஓட்டி வந்தவர் அதி­கா­ரி­யின் கட்டளைக்­குக் கீழ்ப்­ப­டி­யா­மல் தன் வாக­னத்தை வேக­மாக ஓட்­டிச் சென்­றார்.

கடை­சி­யாக அந்த 21 வயது ஓட்டுநர், சுவா சூ காங்­கில் தடுத்து நிறுத்­தப்­பட்டு கைது­செய்யப்பட்டார்.

ஆபத்­தான முறை­யில் வாக­னத்தை ஓட்­டி­யது, இதர போக்கு­வ­ரத்­துக் குற்­றங்­க­ளைச் செய்­தது ஆகி­ய­வற்­றுக்­காக அந்த ஆட­வர் கைதா­ன­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

இந்­தச் சம்­ப­வத்­தில் யாருக்­கும் காயம் இல்லை என்­றும் புலன்­வி­சா­ரணை தொடர்­வ­தா­க­வும் காவல்­துறை கூறி­யது.