பத்தே நிமிடங்களில் முடிவை வழங்கும் உமிழ்நீர் பரிசோதனைக் கருவி

2 mins read
f87b04dd-88f2-4e18-b048-6f343d42a2b3
-

பத்தே நிமி­டங்­களில் முடி­வு­களை வழங்­கும் போதைப்­பொரு­ளுக்­கான புதிய உமிழ்­நீர் பரி­சோ­த­னைக் கருவிகள் சிங்­கப்­பூர் சோத­னைச்­சா­வ­டி­களில் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. அவை சாலைத் தடுப்­பு­களி­லும் பயன்­ப­டுத்­தப்­படும்.

உள்­துறை அமைச்­சின் நிதி ஒதுக்­கீட்டு விவா­தத்­தின்­போது நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று பேசிய உள்­துறை துணை அமைச்­சர் முகம்­மது ஃபைஷால் இப்­ரா­ஹிம், ஜன­வ­ரி­யி­லி­ருந்து அக்­க­ரு­வி­கள் சோத­னைச்­சா­வ­டி­களில் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாகத் தெரி­வித்­தார்.

உல­க­ள­வில் போதைப்­பு­ழக்­கம் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தால், சிங்­கப்­பூரை போதைப்­பு­ழக்­கம் இன்றி வைத்­தி­ருப்­ப­தில் இது சவா­லாக விளங்­கு­வ­தாக அவர் சொன்­னார்.

"இந்­தக் கரு­வி­கள் இல­கு­வா­க­வும் கச்­சி­த­மா­க­வும் உள்­ளன. சோத­னைச்­சா­வ­டி­களில் போதைப் புழங்­கி­க­ளைக் கண்­ட­றிய ஆக்­க­பூர்­வ­மான வழி­யாக இவை உள்­ளன," என்­றார் அவர்.

காவல்­து­றை­யி­ன­ரும் மத்திய போதைப்­பொ­ருள் ஒழிப்புப் பிரிவு அதி­கா­ரி­களும் நடத்­தும் சாலைத் தடுப்பு கூட்டு நட­வ­டிக்­கை­க­ளின்­போது இந்­தப் பரி­சோ­த­னைக் கரு­வி­கள் பயன்­ப­டுத்­தப்­படும் என்று பேரா­சி­ரி­யர் ஃபைஷால் தெரி­வித்­தார்.

களத்­தில் பயன்­ப­டுத்­தப்­படக்­கூ­டிய இந்த முதற்­கட்ட பரி­சோ­த­னைக் கரு­வி­யால் குறு­கிய நேரத்­தில் முடி­வு­களை வழங்க முடி­வ­தால், பிடி­பட்­ட­வர்­க­ளி­டம் போதைப்­பு­ழக்­கம் குறித்து அதி­கா­ரி­கள் விசா­ரணை செய்ய இது உத­வி­யாக இருக்­கும் என்று உள்­துறை அமைச்சு கூறி­யது.

இதற்­கி­டையே, சிங்­கப்­பூ­ரில் போதைப்­பு­ழக்­கம் தொடர்ந்து கட்­டுக்­குள் இருக்­கும் அதே­வே­ளை­யில், இளை­யர்­க­ளி­டையே போதைப்­பு­ழக்­கம் இருப்­பது குறித்து உள்­துறை அமைச்சு கவலை கொண்­டி­ருந்­தப்­ப­தாக பேரா­சி­ரி­யர் ஃபைஷால் சொன்­னார்.

போதைப்­பொ­ருள் தீங்கு விளை­விப்­பவை என்­பதை ஏற்­றுக்­கொள்­ளும் இளை­யர்­கள் பெரும்­பா­லா­னோர், போதைப்­பொரு­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நிலைப்­பாடு எடுக்­கப்­பட்டு வரு­வதை ஆத­ரிக்­கின்­ற­னர். ஆனா­லும், இளம் சிங்­கப்­பூ­ரர்­கள் சிலர், குறிப்­பாக கஞ்சா உட்­கொள்­வதை ஏற்­றுக்­கொள்­ளக்­கூடிய மனப்­போக்­கு­டன் இருப்­ப­தாக பேரா­சி­ரி­யர் ஃபைஷால் குறிப்­பிட்­டார்.

போதைப்­பு­ழங்­கி­கள் மீண்­டும் குற்­றம் புரி­யும் சாத்­தி­யத்­தைக் குறைக்க சிறைக் கைதி­கள், முன்­னாள் குற்­ற­வா­ளி­கள், அவர்­தம் குடும்­பங்­க­ளுக்­குக் கூடு­தல் ஆதரவு அளிக்­கப்­படும் என்­றும் துணை அமைச்சர் சொன்­னார்.