தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூடுதல் மாணவர்களுக்கு இணையப் பாதுகாப்பு திறன்களை சிங்கப்பூர் ஆயுதப் படை வழங்கும்

2 mins read
37e1c209-c20f-409a-bb07-9497f17c1d4d
-

மாண­வர்­கள் மின்­னி­லக்க, இணை­யப் பாது­காப்­புத் திறன்­களை வளர்த்­துக்­கொள்ள உத­வும் திட்­டம், வரும் ஆண்­டு­களில் விரி­வு­ப­டுத்­தப்­பட்டு கூடு­த­லான மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும்.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் நான்­கா­வ­தும் ஆகப் புதிய பிரிவு­மான மின்­னி­லக்க, உள­வுச் சேவை நடத்­தும் 'சென்­டி­னல்' திட்­டம், உயர்­நி­லைப்­பள்ளி, தொடக்­கக் கல்­லூரி, பல­து­றைத் தொழிற்­கல்­லூரி மாண­வர்­க­ளுக்­குப் பயி­ல­ரங்­கு­க­ளை­யும் போட்டி­களை­யும் நடத்­து­வ­தாக தற்­காப்பு மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது தெரி­வித்­துள்­ளார்.

இணை­யப் பாது­காப்­பைப் பொறுத்­த­மட்­டில், வட்­டார அள­வில் கூடு­த­லான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக தற்­காப்பு மூத்த துணை அமைச்­சர் ஹெங் சீ ஹாவ் கூறி­னார்.

எடுத்­துக்­காட்­டாக, ஏடி­எம்­எம் இணை­யப் பாது­காப்பு, உன்­னத தக­வல் மையத்­திற்­காக சாங்கி கடற்­ப­டைத் தளத்­தில் இடவச­தி ஏற்படுத்தித் தரும் பணி நடை­பெற்று வரு­கிறது. இவ்­வாண்டு மூன்­றாம் காலாண்­டிற்­குள் இது தயா­ரா­கும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

2021ல் 15வது ஆசி­யான் தற்­காப்பு அமைச்­சர்­கள் கூட்­டத்­தில் (ஏடி­எம்­எம்) இந்த நிலை­யத்தை அமைப்­பதற்கு ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டி­ருந்­தது.

தற்­காப்பு அமைச்­சின் நிதி ஒதுக்­கீட்டு விவா­தத்­தின்­போது நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் பேசிய திரு ஸாக்­கி­யும் திரு ஹெங்­கும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்­த­னர்.

"அடிப்­படை நிர­லி­டு­தல் போன்ற அடிப்­ப­டைத் திறன்­களை மாண­வர்­கள் பெறும் நோக்­கில் 'சென்­டி­னல்' திட்­டம் கவ­ன­மாக வரை­யப்­பட்­டது.

"முன்­னோ­டித் திட்­டத்­தில் மாண­வர்­கள் ஆர்­வத்தை வெளிப்­ப­டுத்­தி­னர். வரும் ஆண்டு­களில் அனைத்து உயர்­நி­லைப்­பள்­ளி­கள், தொடக்­கக் கல்­லூ­ரி­கள், பல­து­றைத் தொழிற்­கல்லூரிகள், தொழில்­நுட்­பக் கல்விக் கழக மாண­வர்­க­ளுக்கு இத்­திட்­டத்தை வழங்க சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு அமைப்பு போன்ற இதர அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்து நாங்­கள் பணி­யாற்றி வரு­கி­றோம்," என்று திரு ஸாக்கி கூறி­னார்.

நான்கு உயர்­நி­லைப்­பள்­ளி­கள், 13 தொடக்­கக் கல்­லூ­ரி­கள், ஐந்து பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­களைச் சேர்ந்த 300க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் கடந்த ஆண்டு இத்­திட்­டத்­தில் பங்­கெடுத்­த­தாக தற்­காப்பு அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

மின்­னி­லக்க நிலை­யில் தற்­காப்பு குறித்த விழிப்­பு­ணர்வை அதி­க­ரிக்க, 2019ல் முழு­மைத் தற்­காப்­பின் ஆறா­வது தூணாக மின்­னி­லக்­கத் தற்­காப்பு சேர்க்­கப்­பட்­ட­தாக அமைச்சு சொன்­னது.

மின்­னி­லக்­கத் தற்­காப்­பின் முக்­கி­யத்­து­வம் குறித்து இளம் வய­தி­லி­ருந்தே சிங்­கப்­பூ­ரர்­களை ஈடு­ப­டுத்­து­வ­தற்­கான அவ­சி­யத்தை தானும் சிங்­கப்­பூர் ஆயுதப் படை­யும் அறிந்து வைத்தி­ருப்­ப­தாக அமைச்சு விவ­ரித்­தது.

அந்த வகை­யில், சிங்­கப்­பூ­ரின் மின்­னி­லக்­கத் தற்­காப்­புக்­குப் பங்­க­ளிக்­கக்­கூ­டிய பயன்­த­ரும் இணை­யப் பாது­காப்பு, மின்­னி­லக்­கத் திறன்­களை இளை­யர்­கள் பெறும் வகை­யில் 'சென்­டி­னல்' திட்­டம் வரைப்­பட்­டுள்­ள­தாக அமைச்சு கூறி­யது.