கொண்டோமினியம் எனும் தனியார் குடியிருப்பு மறுவிற்பனை வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக ஜனவரியில் குறைந்தது. சீனப்புத்தாண்டு காலத்தில் கைமாறிய வீடுகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது.
ஒட்டுமொத்த கொண்டோ மினிய மறுவிற்பனை வீட்டு விலை 0.6 விழுக்காடு குறைந்து உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த 0.7 விழுக்காட்டில் இருந்து இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.
சொத்து இணையத்தளங்களான '99.co', எஸ்ஆர்எக்ஸ் ஆகியவை நேற்று வெளியிட்ட புள்ளி விவரங்களிலிருந்து இது தெரிய வருகிறது.
கடந்த மாதச் சரிவுக்கு முன்பு கொண்டோமினிய மறுவிற்பனை வீட்டு விலைகள் தொடர்ந்து 29 மாதங்களாக அதிகரித்து வந்தன. இதற்கு முன்பு 2020 செப்டம்பரில்தான் வீட்டு விலைகள் குறைந்தன. அப்போது, கொள்ளை நோய் காரணமாக விதிக்கப்பட்ட பல்வேறு தூர இடைவெளி கட்டுப்பாடுகளால் ஒரு விழுக்காடு சரிவு ஏற்பட்டது.
இருந்தாலும் ஜனவரி மாதம் வீட்டு விலை வீழ்ச்சிக்கு விற்பனை நடவடிக்கையில் மந்தமான பருவமே காரணம் என்று சொத்துப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.
உயர் வட்டி விகித சூழலைக் கருத்தில்கொண்டு வீட்டு விற்பனையை உரிமையாளர்கள் நிறுத்தி வைத்திருந்தனர். வரும் மாதங்களில் வீட்டு விலைகள் தொடர்ந்து சரியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜனவரியில் விலையுயர்ந்த பரிவர்த்தனைகள் குறைவாக இருந்தது என்று உலகளாவிய ஒரு நிறுவனத்தின் மூத்த பகுப்பாய்வாளரான மோகன் சந்திரசேகரன் தெரிவித்தார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் மறுவிற்பனை வீடுகளில் ஏற்பட்ட ஆர்வம் விலைச்சரிவுக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.
தனியார் குடியிருப்பில் தங்களுக்குத் தகுந்த வீடுகள் கிடைக்காதவர்கள் கட்டுப்படியாகக்கூடிய வீவகவின் மறுவிற்பனை வீடுகள் பக்கம் திரும்பியிருக்கலாம் என்று திரு சந்திரசேகரன் கூறினார்.
பெரிய வாழ்விடங்களுக்கான தேவை அதிகரித்துவருவதால் வீவக மறுவிற்பனை வீடுகளை சிறந்த தேர்வாக சில வீடு வாங்குவோர் கருதுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் வெளி நாட்டவர்கள் தனியார் மறுவிற் பனை வீடுகளைவிட புதிய தனி யார் வீடுகளில் ஆர்வம் காட்டு கின்றனர். இதுவும் மறுவிற்பனை வீடு வாங்குவோரின் எண் ணிக்கையை குறைவதற்குக் காரணம் என்றார் அவர்.
ஜனவரியில் மத்திய வட்டாரத் தில் விலை 2.5 விழுக்காடு கூடியது. புறநகர்ப் பகுதிகளில் 1.2 விழுக்காடு குறைந்தது.
இதற்கிடையே தொடர்ந்து நான்காவது மாதமாக ஜனவரியில் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக் கை குறைந்தது. இதற்கு, 2022 செப்டம்பரில் அமலுக்கு வந்த சொத்துச் சந்தையை நிலைப் படுத்தும் கட்டுப்பாடுகள் காரண மாகும்.

