காவல்துறை அதிகாரியை இழுத்துச்சென்ற விவகாரம்; மசராட்டி காரை பறிமுதல் செய்ய உத்தரவு

காவல்துறை அதிகாரியை இழுத்துச்சென்ற விவகாரம்; மசராட்டி காரை பறிமுதல் செய்ய உத்தரவு

3 mins read
fe1a2fd0-3e6e-4277-85f2-9d111416a57a
-

காவல்­துறை அதி­கா­ரியை இழுத்­துச் சென்ற விலை­யு­யர்ந்த மச­ராட்டி காரை அர­சாங்­கம் பறி­மு­தல் செய்ய நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. காரின் மதிப்பு தெரி­ய­வில்லை.

லீ செங் யான், 39, தகு­தி­ யிழந்த பிற­கும் மீண்­டும் காரை ஓட்­டி­யது உட்­பட பல்­வேறு குற்­றச்­ செ­யல்­க­ளுக்காக ஏற்­கெ­னவே தண்­டிக்­கப்­பட்­ட­வர்.

சாலைப் போக்­கு­வ­ரத்து சட்­டத்­தின் கீழ் தகு­தி­யி­ழந்த ஒரு­வர், மீண்­டும் மீண்­டும் வாகனத்தை ஓட்டி, அர­சுத் தரப்பு கேட்­டுக் கொண்­டால் அந்­த வாகனத்தைப் பறி­மு­தல் செய்ய நீதி­மன்­றம் உத்­த­ர­விட முடி­யும்.

தற்­போது சிறை­யில் உள்ள லீ, ஏற்­கெ­னவே இரண்டு வழக்கு விசா­ர­ணை­களில் தண்­டிக்­கப்­பட்­ட­வர்.

போக்­கு­வ­ரத்து காவல் அதி­கா­ரிக்கு வேண்­டு­மென்றே காயம் விளை­வித்­தது உள்­ளிட்ட பல்­வேறு குற்­றங்­க­ளுக்­காக லீக்கு 2020 ஜூலை­யில் நான்கு ஆண்டு, ஏழு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. ஆயுள் முழுக்க வாக­னம் ஓட்­ட­வும் அவ­ருக்­குத் தடை விதிக்­கப்­பட்­டது.

கடந்த 2017 நவம்­பர் 17ஆம் தேதி வாக­னம் ஓட்ட தடை விதிக்­கப்­பட்­டும் லீ காரை ஓட்­டியிக்கிறார். அப்­போது இருக்கை வார் அணி­யா­த­தற்­காக பிடோக் ரெசர்வோர் ரோட்­டில் அதி­காரி ஒரு­வர் அவ­ரைத் தடுத்து நிறுத்­தி­னார்.

ஓட்­டு­ந­ரின் கதவு அருகே அதி­காரி நின்­று­கொண்­டி­ருந்­த­போது லீ, திடீ­ரென காரை பின்­னால் நகர்த்தி பிறகு முன்­னோக்­கிச் சென்­றார். அப்­போது காவல் அதி­கா­ரி­யின் சீருடை முன்­க­த­வில் சிக்­கிக்கொண்­ட­தால் பிடோக் ரெசர்வோர் ரோட்­டில் சுமார் 100 மீட்­டர் தூரம் அவர் இழுத்­துச் செல்­லப்­பட்­டார். அதி­காரி கீழே விழுந்­தும் உத­வி­ செய்­யா­மல் அவர் வேக­மா­கச் சென்­று ­விட்­டார்.

இந்த வழக்­கில் லீ மேல்­மு­றை­யீடு செய்­த­தால் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டிருந்தார்.

அப்போதும் நண்­ப­ரால் வாட­கைக்கு எடுக்­கப்­பட்ட பிஎம்­ டபிள்யூ காரை அவர் மறு­ப­டி­யும் ஓட்­டி­னார்.

இத­னால் அவர் மீது மேலும் பல குற்­றச்­சாட்­டு­கள் கொண்­டு ­வ­ரப்­பட்­டன. 2021 மார்ச் 12ஆம் தேதி நடந்த ஒரு சம்­ப­வத்­தில் அவர் சாலைத் தடுப்­பு­க­ளை­யும் மீறி காரை ஓட்­டி­னார். சுமார் 140 கிலோ மீட்­டர் வேகத்­தில் காரை ஓட்­டிச்சென்ற அவர் இரண்டு சிவப்பு விளக்­கு­ சமிக்கஞைக­ளி­லும் காரை நிறுத்­த­வில்லை.

2022 ஜன­வ­ரி­யில் அவ­ருக்கு கூடு­த­லாக ஓராண்டு, ஒன்­பது மாதங்­கள், 16 வாரம் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

2023 ஜன­வரி 18ஆம் தேதி உயர் நீதி­மன்­றத்­தில் குற்­றத்தை ஒப்­புக்கொண்ட அவர், தனக்கு விதிக்­கப்­பட்ட ஆறு வரு­டங்­ களுக்­கும் அதி­க­மான சிறைத் தண்­ட­னையை கரு­ணை காட்டி குறைக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டார்.

தனது செய­லுக்­காக பல­முறை வருந்­தி­ய­தா­க­வும் மீண்­டும் இரண்டு மகள்­க­ளு­டன் சேர்ந்­தி­ருக்க மன்­னிப்பு வழங்­கு­மா­றும் லீ வேண்­டி­னார்.

மச­ராட்­டிக் காரை பறி­மு­தல் செய்­யக்­கூ­டாது என்று வலி­யு­றுத்­திய அவர், அந்­த காரை விற்­று­தான் ஜப்­பா­னில் உள்ள இரண்டு மகள்­க­ளுக்கு உதவ முடி­யும் என்­றார்.

ஆனால் நீதி­பதி அய்டிட் அப்­துல்லா அவ­ரது வேண்­டு­கோளை நிரா­க­ரித்­து­விட்­டார். அதோடு பாடம் கற்­றுக்­கொள்­ளாத லீயை அவர் சாடி­னார்.

"நீங்­கள் செய்த செயல்­க­ளின் கடுமையைப் புரிந்­து­கொண்­ட­தா­கத் தெரி­ய­வில்லை," என்று நீதி­பதி குறிப்­பிட்­டார்.

கடந்த ஜனவரியில் லீயின் சகோதரி, தனது சட்­டச் செல­வு ­க­ளுக்­காக பெற்­றோ­ரி­டம் லீ கடன் வாங்­கி­யி­ருந்­த­தா­க­வும் அவ­ரது இரண்டு மகள்­களை பார்த்­துக் கொள்­ள­வும் மச­ராட்டி காரை பெற்­றோ­ரி­டம் அவர் அடகு வைத்­தி­ருந்­த­தா­க­வும் அத­னால் காரை பறி­முதல் செய்­யக் கூடாது என்­றும் மாவட்ட நீதி­பதி கமலா பொன்­னம்­ப­லத்­தி­டம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தார்.

ஆனால் நேற்று நடைபெற்ற விசாரணையில் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் டிமோதியஸ் கோ, குற்றச்செயல் புரிந்தபோது லீ காருக்குச் சொந்தக்காரராக இருந்ததால் அதனை பறிமுதல் செய்யாமல் மற்றொருவருக்கு காரின் உரிமையை மாற்ற அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டார்.

இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.