ஆறாம் தலைமுறை தொலைத்தொடர்புத் திட்டம்

2 mins read
00141300-e0a6-4995-86e0-e65d0beb9e39
கைத்­தொ­லை­பே­சிக்­கான ஆறாம் தலை­முறை தொலைத்­தொ­டர்­புத் திட்­டம், வீடு­க­ளுக்கு நொடிக்கு 10 கிகா­பைட் விரி­வலை இணைப்­புத் திட்­டம் ஆகி­யவை தொடர்­பில் சிங்­கப்­பூர் திட்­ட­மிட்டு வரு­கிறது. படம்: ஏஎஃப்பி -

கைத்­தொ­லை­பே­சிக்­கான ஆறாம் தலை­முறை தொலைத்­தொ­டர்­புத் திட்­டம், வீடு­க­ளுக்கு நொடிக்கு 10 கிகா­பைட் விரி­வலை இணைப்­புத் திட்­டம் ஆகி­யவை தொடர்­பில் சிங்­கப்­பூர் திட்­ட­மிட்டு வரு­கிறது.

அது­கு­றித்த தேசிய அள­வி­லான திட்­ட­வ­ரைவு தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய வளர்ச்சி வாய்ப்­பு­களை வடி­வ­மைக்­க­வும் மின்­னி­லக்க ஆதிக்­கத்­துக்­கான உல­க­ளா­விய பந்­த­யத்­தில் விரைந்து முன்­னே­ற­வும் சிங்­கப்­பூ­ருக்கு இது உத­வும்.

மின்­னி­லக்­கத் தொடர்­புத் திட்­ட­வ­ரைவு என்­பது இதன் பெயர். சிங்­கப்­பூ­ரில் கூடு­த­லான கட­ல­டிக் கம்­பி­வ­டங்­க­ளைப் பொருத்­து­வது தொடர்­பான திட்­டங்­களும் இதில் சேர்க்­கப்­படும்.

மின்­னி­லக்க வர்த்­த­கத்தை மேம்­ப­டுத்­து­வ­தும் சிங்­கப்­பூர்­வழி­யாக மேற்­கொள்­ளப்­படும் தர­வுப் பரி­மாற்­றத்தை மேம்­ப­டுத்­து­வ­தும் இதன் இலக்­கு­கள்.

நாட்­டிற்­குக் கூடு­த­லான முத­லீ­டு­களை ஈர்க்க இவை உத­வும்.

சிங்­கப்­பூ­ரர்­கள் அனை­வ­ருக்­கு­மான பொரு­ளி­யல் வாய்ப்­பு­களை உரு­வாக்க இது கைகொ­டுக்­கும் என்று தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ கூறி­னார்.

நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் அடுத்த 50 ஆண்­டு­க­ளுக்கு சிங்­கப்­பூர் குறித்த திட்­ட­மி­டலை வடி­வ­மைப்­ப­தற்கு ஈடா­னது இது என்­றார் அவர்.

நிலப் போக்­கு­வ­ரத்­துப் பெருந்­திட்­டம் 2040, அடுத்த 20 ஆண்டு­க­ளுக்­கான நாட்­டின் போக்­கு­வ­ரத்து இலக்­கு­களை வரை­ய­றுப்­ப­தற்­குச் சமம் என்­றும் கூற­லாம் என்­றார் அமைச்­சர் டியோ.

இதே­போன்ற தொலை நோக்கு சில நாடு­க­ளுக்கு உண்டு.

இருப்­பி­னும் அதை நடை­முறைப்­ப­டுத்­து­வது தொடர்­பில் அவை திட்­ட­மி­டு­வது குறைவே என்று அவர் குறிப்­பிட்­டார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தொடர்பு, தக­வல் அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீட்டு விவா­தத்­தின்­போது அமைச்­சர் இவ்­வாறு கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரின் தொலைத்­தொடர்­புக் கட்­ட­மைப்பு மேம்­பாடு குறித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கேள்­வி­க­ளுக்கு அவர் பதி­ல­ளித்­தார்.

தேசிய அள­வி­லான திட்­ட­வரை­வைத் தயா­ரிக்க ஆலோ­ச­னைக் குழு ஒன்றை அமைத்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அதில் வர்த்­த­கம், தொழில்­துறை சார்ந்த எட்டு வல்­லு­நர்­கள் இடம்­பெற்­றுள்­ள­னர்.

திட்­டம் இவ்­வாண்­டின் பிற்­பாதி­யில் தொடங்­கப்­படும்.

தொடர்பு, தக­வல் மூத்த துணை­ய­மைச்­சர் டாக்டர் ஜனில் புதுச்­சே­ரி­யும் 'வெஸ்­டர்ன் டிஜிட்­டல்' நிறு­வ­னத்தின் அனைத்துலகப் பிரிவுத் துணைத்­தலை­வர் இர்­வின் டானும் இந்தக் கு­ழு­விற்­குக் கூட்­டா­கத் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

சிங்­கப்­பூர் வீடு­க­ளுக்­குத் தற்­போது நொடிக்கு 1 கிகா­பைட் வேகம் கொண்ட இணை­யத் தொடர்பு வழங்­கப்­ப­டு­கிறது.

கூடு­த­லான உள்­ளூர் நிறு­வ­னங்­கள் தொலைத்­தொ­டர்­புச் சேவை வழங்­கு­வ­தால், இங்­குள்ள அதிக எண்­ணிக்­கை­யி­லான வீடு­கள் அதி­வேக இணை­யத் தொடர்பு பெற்­றி­ருப்­பது சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது.

'5ஜி' எனப்­படும் ஐந்­தாம் தலை­முறை தொலைத்­தொ­டர்­புச் சேவையை அறி­மு­கப்­ப­டுத்­திய சில நாடு­களில் சிங்­கப்­பூ­ரும் ஒன்று.

'4ஜி' எனப்­படும் நான்­காம் தலை­முறை தொலைத்­தொ­டர்­புச் சேவை­யை­விட '5ஜி' இணைப்பு 10 மடங்கு வேக­மா­னது.

கூடு­த­லாக ஏறக்­கு­றைய 1,000 கரு­வி­களை எந்த இடை­யூ­றும் இன்றி இதன்­மூ­லம் இணைக்­க­ முடியும். ஒப்­பு­நோக்க, '6ஜி' எனப்­படும் ஆறாம் தலை­மு­றைத் தொலைத்­தொ­டர்­புச் சேவை '5ஜி' இணைப்­பை­விட 100 மடங்கு வேக­மா­ன­தாய் இருக்­கும்.

அறி­வார்ந்த தேசம், மின்­னி­லக்­கத்­துக்­கான அர­சாங்க அலு­வ­ல­க­மும் தேசிய ஆய்வு அற நிறு­வ­ன­மும் அடுத்த சில மாதங்களில் இது தொடர்­பான மேல்­வி­வ­ரங்­களை வெளி­யி­டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.