அடுத்தவரின் கைப்பேசியைத் திருடி அவரின் கணக்கிலிருந்து பணத்தை எடுத்தார்

அடுத்தவரின் கைப்பேசியைத் திருடி அவரின் கணக்கிலிருந்து பணத்தை எடுத்தார்

1 mins read
ab2f0478-6eb3-4784-a2d8-2aae778bee0d
-

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படையைச் சேர்ந்த முழு­நேர தேசிய சேவை­யா­ளர் ஒரு­வர், வேலை­யி­டத்­தில் தனக்குக்கீழ் பணி­யாற்­றிய ஒரு­வ­ரின் கைப்­பேசியைத் திருடி, அதைப் பயன்­ப­டுத்தி பிறகு அவருடைய வங்­கிக் கணக்­கில் நுழைந்­தார்.

முகம்­மது இஸ்­கந்­தர் முகம்­மது அன்­சாரி, 23, என்ற அந்த முழு­நேர தேசிய சேவை­யா­ள­ரும் அவ­ரின் சகா­வான நிசார் சஃபிக் இஸ்­மாடி, 21, என்­ப­வ­ரும், பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் வங்­கிக் கணக்­கில் இருந்த $690 பணத்தையும் அப்படியே இஸ்­கந்­த­ரின் கணக்­கிற்கு மாற்­றி­விட்­டனர்.

குற்­றம் செய்­த­போது இஸ்­கந்­தர் கார்ப்­ப­ர­ல் பதவிநிலையில் இருந்­தார். அவ­ருக்கு மூன்று மாதம் ஐந்து வாரம் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அவர் குற்­றங்­களை ஒப்­புக்­கொண்­டார்.

நிசார் சம்­பந்­தப்­பட்ட வழக்கு இன்­னும் நிலு­வை­யில் இருக்­கிறது.

இஸ்­கந்­த­ரும் நிசா­ரும், பாதிக்­கப்­பட்­ட­வ­ரான லியோன் டே, 23, என்­ப­வ­ரும் ஈசூ­னில் உள்ள சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் மூன்­றாவது பிரி­வில் முழு­நேர தேசிய சேவை­யா­ளர்­க­ளாக சேவை­யாற்­றி­ய­போது 2022 ஆகஸ்டில் இந்­தக் குற்­றச்செயல்­கள் நிகழ்ந்­த­தா­க விசாரணையில் தெரி­விக்­கப்­ பட்­டது.