இடைவழிப் பேருந்தும் எஸ்பிஎஸ் பேருந்தும் விபத்து: 3 பேர் காயம்

இடைவழிப் பேருந்தும் எஸ்பிஎஸ் பேருந்தும் விபத்து: 3 பேர் காயம்

1 mins read
858adcc5-2726-40fc-a8c4-abc096de0f95
எஸ்­பி­எஸ் டிரான்­சிட் பேருந்­தும் இடை­வ­ழிப் பேருந்­தும் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில் நேற்று விபத்­துக்­குள்­ளா­யின. -

எஸ்­பி­எஸ் டிரான்­சிட் பேருந்­தும் இடை­வ­ழிப் பேருந்­தும் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில் நேற்று விபத்­துக்­குள்­ளா­யின.

அதில் பேருந்து ஓட்­டு­நர் ஒரு வரும் இரண்டு பய­ணி­களும் காயம் அடைந்­த­னர். மூவ­ரும் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர். விபத்து கென்ட் ரிட்ஜ் கிர­செண்­டில் நிகழ்ந்­தது.

இடை­வ­ழிப் பேருந்து ஓட்­டு­நரும், 41, ஒரு பேருந்­தில் இருந்த ஒரு மாதும், 25, மற்­றொரு பேருந்­தில் இருந்த வேறு ஒரு மாதும், 36, காய­ம­டைந்து சுய­நி­னை­வு­டன் இருந்­ததை அங்கு விரைந்த அதி­கா­ரி­கள் கண்­ட­னர்.

விபத்து தொடர்­பில் புலன் வி­சா­ரணை நடந்­து­வ­ரு­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

விபத்­தில் சிறிய அள­வில் காயம் அடைந்த இதர இரண்டு பேர் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்ல மறுத்­து­விட்­ட­னர்.