சாலை விபத்து: 9 பேர் காயம்; இருக்கையில் சிக்கிய ஓட்டுநர்

சாலை விபத்து: 9 பேர் காயம்; இருக்கையில் சிக்கிய ஓட்டுநர்

2 mins read
47202e87-e5c5-407d-b184-cb11a7b32e03
-

எஸ்­பி­எஸ் டிரான்­சிட் பேருந்து ஒன்­றும் கன­ரக இழுவை வாக­னம் ஒன்­றும் புக்­கிட் தீமா விரை­வுச் சாலையை நோக்­கிச் செல்­லும் சிலேத்­தார் விரை­வுச் சாலை­யில் விபத்­துக்­குள்­ளா­னதை அடுத்து ஒன்­பது பேர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டுசெல்­லப்­பட்­ட­னர்.

பேருந்தை ஓட்டிவந்த 53 வயது ஓட்­டுநர் தன் இருக்­கை­யில் சிக்­கிக்­கொண்­டார். சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் அவரை மீட்­ட­னர்.

இதர எட்டு பய­ணி­களும் காயம் அடைந்­த­னர். அந்­தப் பய­ணி­களுக்கு வயது 18 முதல் 57 வரை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அவர்­கள் சுய­நி­னை­வு­டன் கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டுசெல்­லப்­பட்­ட­னர்.

கன­ரக இழுவை வாக­னத்தை ஓட்டி வந்த 60 வயது ஓட்­டு­நர் காவல்­து­றை­யின் புலன்­வி­சா­ரணை­யில் உதவி வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த விபத்து பற்றி நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று முற்­ப­கல் சுமார் 11 மணிக்கு எச்­ச­ரிக்கை விடுத்­தது.

சிலேத்­தார் விரை­வுச்­சா­லை­யின் 3வது தடத்தைத் தவிர்த்­துக்கொள்­ளும்­படியும் பிறகு 2, 3, 4 ஆகிய தடங்­க­ளைத் தவிர்த்­துக்கொள்­ளும்­படியும் ஆணை­யம் ஆலோ­சனை கூறி­யது.

இத­னி­டையே, எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வ­னத்­தின் வாடிக்­கை­யா­ளர் அனு­ப­வம், தொடர்புத் துறை­யின் துணைத் தலை­வரான திரு­வாட்டி கிரேஸ் வூ, விபத்­தில் சிக்­கிய சேவை எண் 161 பேருந்­தில் இருந்த எல்லா பய­ணி­க­ளோ­டும் நிறு­வ­னம் தொடர்­பு­கொண்டு வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

காயம் அடைந்­த­வர்­கள் விரை­வாக முழு­மை­யா­கக் குண­ம­டைய வேண்­டும் என்று கூறிய அவர், எஸ்­பி­எஸ் டிரான்­சிட் பேருந்து ஓட்­டு­ந­ரும் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­வ­தா­கக் கூறி­னார். காவல்­துறை புலன்­விசா­ர­ணை­யில் எஸ்­பி­எஸ் டிரான்­சிட் உதவி வரு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.