உயர்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கை முறையில் மாற்றம்

2 mins read
23155c5b-a0c4-441d-b9d0-dc8c12b5a02f
தொடக்­கப்­பள்ளி இறு­தி­யாண்­டுத் தேர்­வில் தேர்ச்சி பெற்ற மாண­வர்­கள், இனி வழக்­க­நிலை (கல்வி), வழக்­க­நிலை (தொழில்­நுட்­பம்), விரை­வு­நிலை என்ற பிரி­வு­க­ளின்­கீழ் உயர்­நி­லைப் பள்­ளி­களில் சேர்க்­கப்­ப­ட­மாட்­டார்­கள். படம்: சீன ஊடகக் குழுமம் -

சிங்­கப்­பூ­ரின் உயர்­நி­லைப் பள்­ளி­களில் மாண­வர் சேர்க்­கை­முறை மாற்­றம் காண­வி­ருக்­கிறது.

தொடக்­கப்­பள்ளி இறு­தி­யாண்­டுத் தேர்­வில் தேர்ச்சி பெற்ற மாண­வர்­கள், இனி வழக்­க­நிலை (கல்வி), வழக்­க­நிலை (தொழில்­நுட்­பம்), விரை­வு­நிலை என்ற பிரி­வு­க­ளின்­கீழ் உயர்­நி­லைப் பள்­ளி­களில் சேர்க்­கப்­ப­ட­மாட்­டார்­கள்.

அதற்­குப் பதில், 1, 2, 3 என மூன்று பிரி­வு­களில் மாண­வர் சேர்க்கை இடம்­பெ­றும்.

கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் இதைத் தெரி­வித்­தார்.

இந்த மூன்று பிரி­வு­கள், மாண­வர்­கள் உயர்­நி­லைப் பள்­ளி­யில் சேர்­வ­தற்­கா­னவை மட்­டுமே.

மாண­வர்­க­ளின் உயர்­நி­லைப் பள்ளி அனு­ப­வத்தை இவை எந்த வகை­யி­லும் பாதிக்­க­மாட்டா.

ஒவ்­வொரு வகுப்­பி­லும் எல்­லா­வ­கைப் பிரி­வைச் சேர்ந்த மாண­வர்­களும் இடம்­பெற்­றி­ருப்­பர்.

'ஜி1', 'ஜி2', 'ஜி3' என மூன்று நிலை­களில் அவர்­கள் பயில விரும்­பும் பாடங்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்­துக்­கொள்­ள­லாம்.

உயர்­நி­லைப் பள்­ளிக் கல்­வி­யில் தற்­போது இருப்­ப­தைப்­போல் வழக்­க­நிலை, விரை­வு­நிலை என்ற பேதங்­கள் இருக்­காது எனக் கூறப்­பட்­டது.

கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக, முழு­மை­யான பாட அடிப்­ப­டை­யி­லான தரம்­பி­ரிப்­பு­முறை 28 பள்­ளி­களில் சோதிக்­கப்­பட்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில் தற்­போது வெளி­வந்­துள்ள உயர்­நி­லைப் பள்ளி மாண­வர் சேர்க்கை குறித்த இந்த அறி­விப்பு, மாண­வர்­க­ளின் கல்­விப் பாதை­களை விரி­வு­படுத்த கல்வி அமைச்சு மேற்­கொள்­ளும் முயற்­சி­யைக் காட்­டு­கிறது.

பல­த­ரப்­பட்ட மாண­வர்­கள் ஒரே வகுப்­பில் பயில்­வ­தை­யும் வகுப்­ப­றை­யி­லும் பள்­ளி­யி­லும் அவர்­கள் கலந்து பழ­கு­வ­தை­யும் இது ஊக்­கு­விக்­கிறது.

கல்வி தொடர்­பில், தேவை­யற்ற போட்­டி­க­ளைத் தவிர்க்­க­வும் இந்த முறை உத­வு­கிறது.

பாட அடிப்­ப­டை­யி­லான தரம்­பி­ரிப்பு முறை­யில் சவால்­களும் இருக்­கின்­றன என்று அமைச்­சர் சான் கூறி­னார்.

வெவ்­வேறு திறன்­க­ளைக் கொண்ட மாண­வர்­க­ளுக்கு கால அட்­ட­வணை வரை­வது உள்­ளிட்ட சவால்­களை சுட்­டி­னார்.

"பள்­ளி­க­ளுக்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் கூடு­தல் வேலை. மேலும் கடி­ன­மாக உழைக்க நேரி­டும்," என்று திரு சான் குறிப்­பிட்­டார்.