பாட அடிப்படையிலான தரம்பிரிப்பு முறையின் நன்மைகள்

பாட அடிப்படையிலான தரம்பிரிப்பு முறையின் நன்மைகள்

2 mins read
586abe5f-36c6-42f9-be9d-a14bcfc5e9e4
பாடங்­களை விருப்­பத்­தின் அடிப்­ப­டை­யில் தெரி­வு­செய்­யா­மல், அனைத்­துப் பாடங்­க­ளுக்­கும் நேரம் ஒதுக்க உத­வும் வகை­யில் பாடங்­களை மேம்­பட்ட அல்­லது குறை­வான நிலை­யில் தெரி­வு­செய்­தல் நன்­மை­ய­ளிக்­கும். படம்: சீன ஊடகக் குழுமம் -

முழு­மை­யான பாட அடிப்­ப­டை­யி­லான தரம்­பி­ரிப்பு முறை, மாண­வர்­க­ளின் கல்­விப் பய­ணத்­தில் நல்ல மாற்­றங்­க­ளைக் கொண்டு­வ­ரும் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் கூறி­இருக்­கி­றார்.

தெம்­ப­னிஸ் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பே யாம் கெங், அங் மோ கியோ குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டேரல் டேவிட் ஆகி­யோர் இந்­தப் பகுப்­பு­முறை குறித்த கூடு­தல் விவ­ரங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ளும்­படி கோரிக்கை விடுத்­தி­ருந்­த­னர்.

அவர்­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கை­யில் அமைச்­சர் சான் இவ்­வாறு கூறி­னார்.

இந்­தப் பகுப்­பு­மு­றை­யின்­கீழ், தகு­தி­பெ­றும் மாண­வர்­கள் சில பாடங்­களை மேம்­பட்ட நிலை­யில் பயி­ல­வும் வாய்ப்பு வழங்­கப்­படும். விருப்­பத் தெரி­வுப் பாடங்­களை, குறை­வான நிலை­யில் பயி­ல­வும் இது வாய்ப்­ப­ளிக்­கும்.

உயர்­நி­லைப் பள்­ளிக் கல்­வி­யின் முடி­வில், அனைத்து மாண­வர்­களும் பொது­வான 'எஸ்­இசி' எனப்­படும் 'சிங்­கப்­பூர்-கேம்­பி­ரிட்ஜ் உயர்­நி­லைக் கல்­விச் சான்­றி­த­ழைப் பெறு­வர்.

வரும் 2027ஆம் ஆண்­டில் இருந்து இதில், வழக்­க­நிலை, சாதா­ரண நிலை என்ற பாகு­பாடு­கள் குறிப்­பி­டப்­ப­டாது.

பள்­ளி­கள் இந்­தப் பகுப்­பு­முறையைக் கடைப்­பி­டிப்­ப­தன் தொடர்­பில் கூடு­த­லாக உழைக்க நேரிட்­டுள்­ளது என்று அமைச்­சர் சான் கூறி­னார்.

அதே­வே­ளை­யில், முழு­மை­யான பாட அடிப்­ப­டை­யி­லான தரம்­பி­ரிப்பு முறை­யின்­கீழ் மாண­வர்­கள் தங்­க­ளது கற்­றல் பய­ணத்­திற்கு மேம்­பட்ட அள­வில் பொறுப்­பேற்­றுக்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும் என்­ப­தை­யும் அவர் சுட்­டி­னார்.

பாடங்­களை விருப்­பத்­தின் அடிப்­ப­டை­யில் தெரி­வு­செய்­யா­மல், அனைத்­துப் பாடங்­க­ளுக்­கும் நேரம் ஒதுக்க உத­வும் வகை­யில் பாடங்­களை மேம்­பட்ட அல்­லது குறை­வான நிலை­யில் தெரி­வு­செய்­தல் நன்­மை­ய­ளிக்­கும்.

'ஐபி' எனப்­படும் ஒருங்­கிணைந்த கல்வித் ­திட்­டத்தை வழங்­கும் பள்­ளி­களும் சிறப்­புப் பள்­ளி­களும் இந்­தப் பகுப்­பு­முறையை முழு­வ­து­மா­கக் கடைப்­பி­டிக்க இய­லாது என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார். நேரடி மாணவர் சேர்க்­கை­முறை மூலம் பல்­வேறு திறன்­கொண்ட மாண­வர்­க­ளைச் சேர்த்­துக்­கொள்ள பள்­ளி­கள் தொடர்ந்து ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­றன.