தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தலையில் அடிபட்டு முதியவர் உயிரிழப்பு: தாக்கிய ஆடவருக்கு 4 ஆண்டு சிறை

2 mins read
9b478d97-791a-4373-9001-7b9aea65f758
-

முதி­ய­வர் ஒரு­வ­ரைத் தாக்­கிய குற்­றத்­திற்­காக 36 வயது ஆட­வ­ருக்கு நான்­காண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டுள்­ளது.

ஆலன் சுவா கிம் வீ (படம்) எனப்­படும் அவர் தாக்­கி­ய­தால் தலை­யில் காய­ம­டைந்த முதி­ய­வர் பின்­னர் மருத்­து­வ­ம­னை­யில் உயி­ரி­ழந்­தார்.

தாக்­கு­தல் சம்­ப­வம் 2021 டிசம்­பர் 25ஆம் தேதி நிகழ்ந்­தது.

ஹவ்­காங் மால் கடைத்­

தொ­கு­தி­யில் காலை உண­வ­ருந்­திய பின்னர் நடந்து சென்­ற சுவா, ஹவ்­காங் அவென்யூ 5ல் உள்ள வீவக புளோக் ஒன்­றின் வெற்­றுத்­த­ளத்­தில் இங் சியோ லெங் எனப்­படும் 74 வயது முதி­ய­வர் புகைப்­பி­டித்­த­தைக் கண்­டார்.

உட­ன­டி­யாக அவ­ரைப் படம் எடுத்­தார் சுவா. ஊன்­று­கோல் துணை­யு­டன் நடக்­கக்­கூ­டிய முதி­ய­வர் அத­னை­அ­றிந்து சுவா­வைத் துரத்­தி­னார்.

தம்மை அவர் தாக்க வரு­வ­து­ போல உணர்ந்த சுவா, தமது வலது தோளால் அந்த முதி­ய­வரை முட்டி தாக்­கி­னார். பின்­பக்­க­மா­கச் சாய்ந்த முதி­ய­வர் தரை­யில் விழுந்­த­தால் அவ­ரின் தலை­யில் அடி­பட்­டது.

அதனை அறிந்து பத­றிய சுவா, காவல்­து­றையை அழைத்து நடந்த விவ­ரத்தை விளக்­கி­ய­து­டன் நடந்­த­வற்­றுக்கு மன்­னிப்­புக் கேட்­டார். ஊன்­று­கோ­லால் முதி­ய­வர் தாக்க வந்­த­தால் திருப்பி அடித்­த­தாக காவல்­து­றை­யி­டம் அவர் தெரி­வித்­தார்.

டான் டோக் செங் மருத்­து­வ­

ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட முதி­ய­வர் தலை­யில் ஏற்பட்ட கடு­மை­யான காயங்­கள் கார­ண­மாக அன்று இரவு 10 மணி­ய­ளவில் மாண்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

சுவா­வைத் தற்­காத்து வாதா­டிய வழக்­க­றி­ஞர் ரஞ்­சித் சிங், சுவா பொது­ந­ல­னில் அக்­கறை உள்­ள­வர் என்­றும் புகை­பி­டிக்க அனு­ம­திக்­கப்­ப­டாத வீவக புளோக் வெற்­றுத்­த­ளத்­தில் ஒரு­வர் புகை­பி­டிப்­ப­தைக் கண்­ட­தும் அது­பற்றி புகார் அளிக்­கும் நோக்­கில் படம் எடுத்­த­தா­க­வும் கூறி­னார்.

பொது இடங்­களை அசுத்­தப்

­ப­டுத்­து­வது, உயர்­மா­டி­யி­லி­ருந்து குப்பை வீசு­வது உள்­ளிட்ட வீட­மைப்­புப் பேட்டை தொடர்­பான குற்­றங்­க­ளைக் கண்டு அது­பற்றி OneService இணை­ய­வா­ச­லில் தமது கருத்­து­களை சுவா பதி­வி­டு­வது வழக்­கம் என்­றும் தற்­காப்பு வழக்­க­றி­ஞர் கூறி­னார்.