கிரேஸ்: மறுசுழற்சி செய்வது கட்டாயமாக்கப்படும்

2 mins read
104267e4-6694-47ab-ac42-2c50f593dbdb
-

தண்ணீர் அதிகம் தேவைப்படும் தொழில்துறைகளுக்கு புதிய விதிமுறை

தண்­ணீர் அதி­கம் தேவைப்­படும் தொழில்­து­றை­கள் தங்­கள் தண்­ணீர் தேவை­யைக் குறைப்­ப­தற்கு உத­வும் வகை­யில் பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் அவற்­றின் புதிய திட்­டங்­களில் மறு­சு­ழற்சி அம்­சங்­கள் கட்­டா­யம் உள்­ள­டக்­கப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­தும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சின் நிதி ஒதுக்­கீட்டு விவா­தத்­தில் பேசிய திரு­வாட்டி ஃபூ, முன்வார்ப்பு, மின்­ன­ணு­வி­யல் மற்­றும் உயிர்­மருத்­து­வத் தொழில்­து­றை­கள் ஆகி­ய­வற்­றின் புதிய திட்­டங்­களும் இதில் அடங்­கும். அவை இல்­லம் அல்­லாத தண்­ணீர் தேவை­யில் 17 விழுக்­காட்­டைப் பிர­தி­ப­லிக்­கிறது என்­றார்.

சிங்­கப்­பூர் நாள் ஒன்­றுக்கு 440 மில்­லி­யன் கேலன் தண்­ணீ­ரைப் பயன்­ப­டுத்­து­கிறது. வரும் 2065ஆம் ஆண்­டுக்­குள் மொத்த தண்­ணீர் தேவை கிட்­டத்­தட்ட இரட்­டிப்­பா­கக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நிறு­வ­னங்­கள் தண்­ணீரை மறு­சு­ழற்சி செய்­வ­தால் தங்­கள் தண்­ணீர் கட்­ட­ணத்­தைக் குறைப்­ப­து­டன் நீண்­ட­காலப் போட்­டித்­தன்­மைக்­குப் பங்­க­ளிக்­க­வும் உதவ முடி­யும் என்று பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் தெரிவித்தது.

தண்­ணீர் தேவை அதிகரிப்பின் பெரும்­ப­குதி இல்­லம் அல்­லாத துறை­யி­லி­ருந்­து­தான் வரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. தற்­போ­துள்ள அதன் 55% மொத்த தண்­ணீர் பயன்­பாடு 60 விழுக்­காட்­டைத் தாண்­டக்­கூ­டும் என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்று கழகம் விளக்கியது.

ஆக, ஆண்­டுக்கு 60,000 கன மீட்­டர் தண்­ணீ­ரைப் பயன்­ப­டுத்­தும் பகுதி மின்­க­டத்தி உற்­பத்­தி­யில் ஈடு­பட்­டி­ருக்­கும் நீர் உற்­பத்தி ஆலை­கள், தங்­கள் நீர் பயன்­பாட்­டில் குறைந்­தது 50 விழுக்­காட்டை மறு­சு­ழற்சி செய்ய வேண்­டும்.

அதே­போல, ஆண்­டுக்கு அதே அள­வி­லான நீரைப் பயன்­ப­டுத்­தும் மின்­ன­ணு­வி­யல் மற்­றும் உயிர்­ம­ருத்­துவ ஆலை­களும் தங்­கள் கழி­வு­நீ­ரில் ஓரு குறிப்­பிட்ட பகு­தியை மறு­சு­ழற்சி செய்ய வேண்­டும்.

இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் மூலம் நாள் ஒன்­றுக்கு ஒன்­பது மில்­லி­யன் கேலன் தண்­ணீ­ரைச் சேமிக்க முடி­யும். இது 2035ஆம் ஆண்டு முதல் நாள் ஒன்­றுக்கு 15 ஒலிம்­பிக் நீச்­சல் குள நீருக்கு ஒப்­பா­கும் என்­றும் கழ­கம் குறிப்­பிட்­டது.

பாதிக்­கப்­பட்ட தொழில்­து­றை­களு­டன் ஆலோ­சனை நடத்­திய கழ­கம், நிறு­வ­னங்­கள் தங்­கள் புதிய திட்­டங்­களில் மறு­சுழற்சி தேவை­க­ளைக் கண்­டு­பி­டித்­துள்­ள­தா­கக் கூறி­யுள்­ள­தா­க­வும் முன்வார்ப்புப் ஆலை­க­ளின் தற்­போ­தைய சரா­சரி மறு­சு­ழற்சி விகி­தம் 43 விழுக்­கா­டாக உள்­ளது என்­றும் குறிப்­பிட்­டது.

தீவின் வடக்குப் பகு­தி­யில் உள்ள இல்­லம் மற்­றும் தொழில்­துறை பயன்­பாட்­டுக்­கான தேவை­க­ளைப் பூர்த்தி செய்­யும் வகை­யில், கிராஞ்சி நீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை­யி­லும் கிராஞ்சி நியூ­வாட்­டர் ஆலை­யி­லும் கூடு­தல் மேம்­பாட்­டுப் பணி­கள் நடை­பெ­றும் என்று அமைச்­சர் கூறி­னார்.

தெங்கா புது­ந­க­ரம், சுங்கை காடுட் சுற்­றுப்­புற நக­ரம் ஆகிய புதிய குடி­யி­ருப்பு மற்­றும் தொழில்­துறைகளில் மேம்­பா­டு­கள் போன்ற பெரிய திட்­டங்­கள் வரும் வேளை­யில் இத்­த­கைய நீர் சுத்­தி­க­ரிப்பு ஆலை­க­ளின் மேம்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் புத்­து­ணர்ச்­சி­யைத் தரும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.