லீ குவான் இயூ உயில் பற்றிய நூலில் தவறான கருத்துகள்

1 mins read
19e77889-2622-4406-9c5d-f4be669b3764
அம­ரர் லீ குவான் இயூ­வின் உயில் பற்­றிய மின்­னூ­லில் பல்­வேறு தவ­றான கருத்­து­கள் இடம்­பெற்­றி­ருந்­தன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அம­ரர் லீ குவான் இயூ­வின் உயில் பற்­றிய மின்­னூ­லில் பல்­வேறு தவ­றான கருத்­து­கள் இடம்­பெற்­றி­ருந்­தன என்­றும் அது நீதி­மன்­றம் அறிந்­த­வற்­றி­லி­ருந்து மாறு­பட்­டி­ருந்­தன என்று மூத்த அமைச்­ச­ரும் தேசிய பாது­காப்­புக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான டியோ சீ ஹியன் நேற்று தெரி­வித்­தார்.

"த பேட்­டல் ஓவர் லீ குவான் இயூஸ் லாஸ்ட் வில்" எனும் தலைப்பு கொண்ட அந்த நூலை எழு­தி­ய­வர் உள்­ளூர் எழுத்­தா­ளர் சுதிர் தாமஸ் வட­கேத். அது கடந்த ஆண்டு ஜூலை­யில் வெளி­யி­டப்­பட்­டது. அதில் முன்­னாள் பிர­த­ம­ரின் உயில் பற்­றி­யும் அவ­ரது 38 ஆக்ஸ்லி ரைஸ் வீட்­டுக்­கான உரி­மைப் போராட்­டம் பற்­றி­யும் எழு­தப்­பட்­டி­ருந்­தது.

"இந்­நூ­லில் உள்ள கருத்துகள் நம்­ப­கத்­தன்­மையை இழந்து­விட்­டன," என்று திரு லீ குவான் இயூ­வின் மறை­வுக்­குப் பின் அவ­ரது சொத்­து­களின் நிர்வாகம் குறித்து கண்டறியும் அமைச்சர்நிலைக் குழுவின் தலைவருமான திரு டியோ சொன்னார்.