$125 மில்லியன் மதிப்பிலான கடலோர ஆய்வுத் திட்டம்

1 mins read
0949d0b8-8753-43a6-bd35-07c361affbbb
பரு­வ­நிலை மாற்­றத்­தின் கார­ண­மாக, சிங்­கப்­பூ­ரைச் சுற்­றி­யுள்ள கடல்­மட்­டத்­தின் அளவு 2100ஆம் ஆண்­டு­வாக்­கில் ஒரு மீட்­டர் வரை உய­ரக்­கூ­டும் என்று மதிப்­பி­டப்­ப­டு­கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் கட­லோ­ரப் பாது­காப்பு மற்­றும் வெள்ள நிர்­வாக ஆற்­றல்­களை வலுப்­ப­டுத்­தும் நோக்­கத்­தில் $125 மில்­லி­யன் மதிப்­பி­லான ஆய்­வுத் திட்­டம் தொடங்­கப்­படும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன் தெரி­வித்­துள்­ளார்.

இத்­திட்­டம், நாட­ளா­விய கட­லோ­ரப் பாது­காப்பு மற்­றும் உள்­நாட்டு வெள்ளப் பாது­காப்­புத் திட்­டங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் என்று குறிப்­பிட்ட பொதுப் பய­னீட்­டுக் கழ­கம், பரு­வ­நிலை மாற்­றத்­தால் கட­லோ­ரப் பகு­தி­களில் ஏற்­படும் பாதிப்­பு­களை சிறப்­பாக நிர்­வ­கிக்க வழி­வ­குக்­கும் என்று கூறி­யது.

இந்­தப் புதிய திட்­டத்­தில், நான்கு ஆய்­வுப் பகு­தி­கள் இருக்­கும். அவை ஒன்றுசேர்ந்து புத்­தாக்­கம், நீடித்த நிலைத்­தன்மை மற்­றும் அறி­வார்ந்த தீர்­வு­களை நாட்­டின் நக­ர­மய மற்­றும் நிலத் தட்­டுப்­பாடுடைய சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் என்­றும் கழ­கம் விவ­ரித்­தது.

நிலைத்­தன்­மை­மிக்க கட­லோ­ரப் பாது­காப்­புத் தீர்­வு­கள், சதுப்­பு­நி­லங்­கள் மற்­றும் செயற்கை நுண்­ண­றிவு போன்ற அறி­வார்ந்த நிர்­வா­கத் தீர்­வு­கள் ஆகி­ய­வற்­றின் மேம்­பா­டு­கள் புதிய திட்­டத்­தில் அங்­கம் வகிக்­கும்.

பரு­வ­நிலை மாற்­றத்­தின் கார­ண­மாக, சிங்­கப்­பூ­ரைச் சுற்­றி­யுள்ள கடல்­மட்­டத்­தின் அளவு 2100ஆம் ஆண்­டு­வாக்­கில் ஒரு மீட்­டர் வரை உய­ரக்­கூ­டும் என்று மதிப்­பி­டப்­ப­டு­கிறது.

அடிக்­கடி வரும் கடு­மை­யான புயல் கார­ண­மா­க­வும் கடு­மை­யான மழைப் பொழிவு கார­ண­மா­க­வும் வெள்ள அபா­யம் அதி­க­ரிக்­கக்­கூ­டிய வாய்ப்­பும் உண்டு என்று கூறப்­படுகிறது.