சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள 100 ஆகப் பெரிய நிறுவனங்களின் நிர்வாக சபைகளில் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ள பெண்களின் விகிதம் 2022இல் சாதனை அளவை எட்டியதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அந்நிறுவனங்களில் நிர்வாக இயக்குநர்களில் பெண்கள் 36 விழுக்காடு பங்கை வகித்தனர். 2013இல் இத்தகைய புள்ளிவிவரங்களை சேகரிக்கத் தொடங்கியதிலிருந்து இதுவே ஆக அதிக விகிதமாகும்.
2021ஆம் ஆண்டில் நிர்வாக மன்ற இயக்குநர்களில் 23 விழுக்காட்டினர் பெண்களாக இருந்தனர். நிர்வாக சபைகளின் பன் முகத்தன்மைக்கான மன்றம் சுமார் 1,300 நிறுவனங்களிடம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
2022இல் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள 100 முக்கிய நிறுவனங்களின் முதல்முறையாக நிர்வாக சபை இயக்குநர்களாக நியமிக்கப்பட்டவர்களில் 21 விழுக்காட்டினர் பெண்கள், 26 விழுக்காட்டினர் ஆண்கள்.
இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது முன்னேற்றமாகும். அவ்வாண்டில் முதன்முறையாக நிர்வாக சபை இயக்குநராக நியமிக்கப்பட்டோரில் 14 விழுக்காட்டினர் மட்டுமே பெண்கள். முதன்முறை இயக்குநர்களில் ஆண்கள் 45 விழுக்காட்டுப் பங்கை வகித்தனர்.
சிட்டி டிவலப்மண்ட்ஸ் சொத்து நிறுவனம், ஃபிரேஸர் அண்ட் நீவ் உணவு பான நிறுவனம், சொகுசு கடிகாரங்களை விற்கும் தி ஹவர் கிளாஸ், முதலீட்டு நிறுவனமான ஜார்டின் சைக்கிள் அண்ட் கேரஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த 2022இல் முதன்முறையாகப் பெண்களை நிர்வாக சபையில் இயக்குநர்களாக நியமித்தன.
சிங்கப்பூர் பங்குச்சந்தையின் புதிய விதிமுறைக்கு ஏற்ப நிறு வனங்கள் கூடுதல் பெண்களை நிர்வாக சபையில் சேர்த்திருக்கலாம் என்று நிர்வாக சபைகளின் பன்முகத்தன்மைக்கான மன்றம் கூறியது. அதன்படி நிர்வாக சபையில்ல் பன்முகத்தன்மையை ஏற் படுத்தும் கொள்கைகளை நிறுவனங்கள் பங்குச்சந்தையிடம் தெரிவிக்க வேண்டும்.

