சக ஊழியர்களை ஏமாற்றியதன் தொடர்பில் ஆடவர் கைது

சக ஊழியர்களை ஏமாற்றியதன் தொடர்பில் ஆடவர் கைது

1 mins read
1744b1a2-f32c-4fc4-adfd-8e1b18fb5a87
ஏமாற்றி மோசம் செய்த குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் பத்­தாண்டு வரை­யி­லான சிறைத்­தண்­ட­னை­யு­டன் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­டக்­கூ­டும். படம்: பிக்ஸாபே -

முத­லீட்டு மோச­டி­கள் மூலம் பணம் பறித்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் 37 வயது ஆட­வர் நேற்று முன்­தி­னம் கைது செய்­யப்­பட்­டார். முன்­னாள் சக ஊழி­யர்­க­ளி­டம் பாதிக்­குப் பாதி லாபம் கிடைக்­கும் என ஆசை­காட்டி இவர் ஏமாற்­றி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மேலும் ஏழு மோச­டிச் சம்­ப­வங்­க­ளி­லும் இவ­ருக்­குத் தொடர்பு இருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கிறது. இத்­த­கைய மோச­டி­கள் மூலம் பாதிக்­கப்­பட்­டோர் $36,500க்கு மேற்­பட்ட தொகையை இழந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

நம்­ப­க­மான முத­லீட்டு வாய்ப்பு என நம்பி 'பே நவ்' முறை­யின்­கீழ் அவர்­கள் ஆட­வ­ருக்­குப் பணம் அனுப்­பி­னர். உறு­தி­ய­ளித்­த­படி பணம் ஏதும் கிடைக்­க­வில்லை என்­ற­றிந்த பிறகே தாங்­கள் ஏமாற்­றப்­பட்­டதை அவர்­கள் உணர்ந்­த­னர் என்று காவல்­துறை கூறி­யது.

சென்ற ஆண்டு டிசம்­பர் 5ஆம் தேதிக்­கும் சென்ற மாதம் 17ஆம் தேதிக்­கும் இடையே அளிக்­கப்­பட்ட புகார்­க­ளின் அடிப்­ப­டை­யில் ஆட­வரை அடை­யா­ளம் கண்­டி­ருப்­ப­தா­கக் காவல்­துறை தெரி­வித்­தது. விசா­ரணை தொடர்­கிறது. ஏமாற்றி மோசம் செய்த குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் பத்­தாண்டு வரை­யி­லான சிறைத்­தண்­ட­னை­யு­டன் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­டக்­கூ­டும்.