மாண்டு கிடக்கக் காணப்பட்ட அரிய வகை ஆமை

1 mins read
c642f5ca-dd08-4888-87ef-6f1c0813f709
-

புகைப்­ப­டக் கலை­ஞர் ஜெயப்­பி­ர­காஷ் போஜன், சென்ற செவ்­வாய்க்­கி­ழமை பாசிர் ரிஸ் பூங்­கா­வில் அரிய வகை பச்சை நிற ஆமை­யைக் (படம்) கண்­டார். பாறை­களில் சிக்­கி­யி­ருந்த ஆமையை விடு­விக்க எண்ணி அவர் தூக்­கி­ய­போது அது ஏற்­கெ­னவே மாண்­டு­விட்­டதை உணர்ந்­தார்.

பின்­னர் லீ கோங் சியன் இயற்கை வர­லாற்று அரும்­பொ­ரு­ள­கத்­திற்கு அது­கு­றித்­துத் தக­வல் அளித்­தார்.

அரும்­பொ­ரு­ள­கத்­தில் இடம் இல்­லா­த­தால் ஆய்­வுக்­காக இந்த ஆமை­யின் உடலை அது ஏற்­றுக்­கொள்ள இய­ல­வில்லை.

தொடர்ந்து, ஆமை­யின் உடலை மீட்க, தேசி­யப் பூங்­காக் கழ­கம் அங்கே சென்­ற­போது அது அங்கே காணப்­ப­ட­வில்லை.

பச்சை நிற ஆமை 0.9 முதல் 1.2 மீட்­டர் வரை வள­ரக்­கூ­டி­யது. சிங்­கப்­பூ­ரில் இது அரு­கி­வ­ரும் இன­மா­கக் கரு­தப்­ப­டு­கிறது. 2020ஆம் ஆண்டில் இருந்து ஆறு கடல் ஆமை­கள் இங்கே மாண்டு கிடக்­கக் காணப்­பட்­டன.