குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாக பதின்மவயது ஆடவர் மீது குற்றச்சாட்டு

3 mins read
20f39106-346a-4b33-91c2-dc847f379916
-

வங்­கிக் கணக்கு விவ­ரங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டால் கடன் வழங்­கப்­படும் என்று டெலி­கி­ராம் செயலி மூலம் அனுப்­பப்­பட்ட தக­வ­லைப் படித்த பிறகு, வங்­கிக் கணக்கு ஒன்­றைத் திறந்து அது­தொ­டர்­பான விவ­ரங்­க­ளைப் பிற­ரி­டம் அனுப்பி அதைப் பயன்­

ப­டுத்த அனு­ம­தித்த குற்­றத்தை பதின்­ம­வ­யது ஆட­வர் ஒரு­வர் புரிந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அவ­ரது யுஓபி வங்­கிக் கணக்கை மோச­டிக் கும்­பல் பயன்­ப­டுத்தி $249,000க்கும் அதி­க­மான கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக்­கி­ய­தாக நம்­பப்­ப­டு­கிறது.

இதற்­காக 19 வயது மதன ராஜ் சிங் பல்­பீர் சிங் (படம்) மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு மே மாதம் டெலி­கி­ராம் செயலி மூலம் அனுப்பிவைக்­கப்­பட்ட அந்­தத் தக­வ­லுக்கு சிங் பதில் அளித்­த­தாக காவல்­துறை கூறி­யது.

அதே மாதத்­தில் யுஓபி வங்­கிக் கணக்­கைத் திறந்து அவர் மட்­டுமே அந்­தக் கணக்­கைப் பயன்­ப­டுத்­து­ப­வர் என்று வங்­கியை ஏமாற்­றி­ய­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­வித்­தன.

வங்­கிக் கணக்­கைத் திறந்­த­தும் இணை­யம் மூலம் வங்­கிச் சேவைக்­கான மறைச்­சொல்லை அடை­யா­ளம் தெரி­யா­த­வ­ரி­டம் சிங் ஒப்­ப­டைத்­தார்.

இந்­நி­லை­யில், சட்­ட­தீ­ரி­யி­லான உத­வி­யைப் பெற விரும்­பு­வ­தாக சிங் நேற்று நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

அவர் மீண்­டும் அடுத்த மாதம் 6ஆம் தேதி­யன்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்.

மோச­டிக் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் சிங்­கிற்கு மூன்று ஆண்­டு­கள் வரை சிறை, அப­ராதம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

வங்­கி­யின் கணி­னிக் கட்­ட­மைப்பை அனு­மதி பெறாத ஒரு­வர் பயன்­ப­டுத்த உத­விய குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் அவ­ருக்கு இரண்டு ஆண்­டு­கள் வரை சிறை, $5,000 வரை அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

மோசடிக் குற்றங்கள் புரிபவர்களுக்கு உடந்தையாக இருக்க சிலர் புதிய வங்கிக் கணக்குகளைத் திறக்கின்றனர். ஆனால் இதை நிரூபிப்பது சவால்மிக்கது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளைத் திருத்துவது குறித்து உள்துறை அமைச்சு பரிசீலித்து வருவதாக கடந்த மாதம் எழுத்துபூர்வ பதில் அளித்தார் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம்.

கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக்­கும் குற்­றங்­க­ளைக் கண்­டு­பி­டிக்க சட்­டப்­பி­ரி­வு­கள் மேம்படுத்தப்பட வேண்டும் என அவர் வலி­யு­றுத்­தி­னார். மோச­டிக் குற்­றங்­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு எதி­ரா­கக் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

"மோசடி குற்­றங்­க­ளைப் புரி­ப­வர்­க­ளுக்கு உடந்­தை­யாக இருப்­ப­தைத் தவிர்க்க எளி­தில் ரொக்­கம் பெறக்­கூ­டிய வாய்ப்­பு­கள், விளம்­ப­ரங்­கள் ஆகி­ய­வற்றை பொது­மக்­கள் தவிர்க்க வேண்­டும்.

"சிங்­பாஸ், வங்­கிக் கணக்கு விவ­ரங்­க­ளைக் கொடுத்­தால் பணம் தரப்­படும் என யாரா­வது சொன்­னால் அதை உட­ன­டி­யாக நிரா­க­ரித்­து­விட வேண்­டும்.

"மோச­டிக் குற்­றங்­க­ளு­டன் சம்­பந்­தப்­பட்ட சிங்­பாஸ், வங்­கிக் கணக்கு உரி­மை­யா­ளர்­கள் அவற்­றுக்கு பொறுப்­பா­ன­வர்­கள் என்று எடுத்­துக்­கொள்­ளப்­படும்," என்று காவல்­துறை தெரி­வித்­தது.

357 பேரி­டம் விசா­ரணை

இதற்­கி­டையே, மோச­டிக் குற்­றங்­கள், மோச­டிக் கும்­பல்­க­ளி­டம் தங்­கள் வங்­கிக் கணக்கு விவ­ரங்­க­ளைக் கொடுத்­தது தொடர்­பாக 357 பேரி­டம் காவல்­துறை விசா­ரணை நடத்­து­கிறது.

1,000க்கும் அதி­க­மான குற்­றச் செயல்­கள் தொடர்­பாக இவர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.

சந்­தேக நபர்­கள் 16

வய­துக்­கும் 75 வய­துக்­கும் உட்­பட்­ட­வர்­கள். கடந்த மாதம் 25ஆம் தேதி­யி­லி­ருந்து நேற்று முன்­தி­னம் நடத்­தப்­பட்ட அதி­ரடி நட­வ­டிக்­கை­யில் இவர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இந்த மோச­டிக் குற்­றங்­கள் மூலம் $4 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.