சிங்கப்பூர்-இந்தியா வட்டமேசை பேச்சை முன்னெடுக்க முயற்சி சிங்­கப்­பூர்-இந்­தியா கணினி நிர­லோட்­டம் 2023 தொடக்கம்

2 mins read
e5df49e0-8cd7-4330-91ad-506634ebfec7
இந்­தியா-சிங்­கப்­பூர் இரு நாடு­க­ளின் கல்வி நிலை­யங்­களும் தொழிற்­துறை சங்­கங்­களும் சேர்ந்து தேர்ச்­சி­மிகு செயல்­திட்­டங்­களை உரு­வாக்கி அதன்­மூலம் எதிர்­கால தேவை­களை ஈடு­செய்ய முயல வேண்­டும் என திரு கான் வலி­யு­றுத்­தி­னார். படம்: டுவிட்டர் -

வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங்­கும் இந்­தியா வின் வெளி­யு­றவு அமைச்­சர் எஸ் ஜெய்­சங்­க­ரும் நேற்று புது­டெல்­லி­யில் பேச்சு நடத்­தி­னர்.

சிங்­கப்­பூர்-இந்­தியா அமைச்­சர்நிலை வட்­ட­மேசை பேச்சை முன்­னெ­டுத்­துச் செல்­வது பற்றி தாங்­கள் விவா­தித்­த­தாக இந்­திய அமைச்­சர் டுவிட்­ட­ரில் கூறி­னார்.

முன்­ன­தாக, சிங்­கப்­பூர் அமைச்­ச­ரும் இந்­திய கல்வி அமைச்­சர் தர்­மேந்­திரா பிர­தா­னும் சிங்­கப்­பூர்-இந்­தியா கணினி நிர­லோட்­டம் 2023 போட்­டியைத் தொடங்கி வைத்­த­னர்.

தேர்ச்சி மேம்­பாட்டில் தொடர்பு­க­ளைப் பலப்­ப­டுத்து­வதைப் பற்றி இருவரும் பேசினர்.

சிங்­கப்­பூர் அமைச்­சர், இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் வர்த்­தகம், முத­லீட்­டைப் பெருக்­கு­வதன் தொடர்­பில் இந்­திய வர்த்­தக அமைச்­சர் பியுஷ் கோய­லு­டன் பேச்சு நடத்­தி­ய­தா­க­வும் இந்­திய ஊட­கங்­கள் தெரி­வித்­தன.

சிங்­கப்­பூர்-இந்­தியா கணினி நிர­லோட்­டம் 2023 நேற்று தெடங்­கியது.

இரு நாடு­க­ளை­யும் சேர்ந்த இளம் கண்­டு­பி­டிப்­பார்­கள் சேர்ந்து செயல்­பட்டு முக்­கி­ய­மான பல கணினி மென்­பொ­ருள், வன்­பொ­ருள் சவால்­க­ளுக்­குத் தீர்­வு­களைக் காண்­பார்­கள்.

நிர­லோட்­ட தொடக்க நிகழ்ச்­சி­யில் உரை­யாற்­றிய திரு கான், சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடைப்­பட்ட ஒத்­து­ழைப்­பில் தேர்ச்சி மேம்­பாடு என்­பது மிக முக்­கி­ய­மான ஒரு துறை என்­பதைச் சுட்­டிக்­காட்­டி­னார்.

ஒன்­றா­கச் சேர்ந்து செயல்­படு­வ­தன் மூலம் ஒரு­வர் மற்­றொரு­வரின் சிந்­தனை செயல்­மு­றை­கள் மூலம் பல­வற்­றை­யும் கற்­றுக்­கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் விளக்கினார்.

இதன்­மூ­லம் தேர்ச்­சி­கள் கூர்மை­ய­டை­யும்; போட்­டித்­தி­றன் வலு­வ­டை­யும். சிறந்த வேலை­களுக்கு உத்­த­ர­வா­தம் கிடைக்­கும் என்று அவர் தெரி­வித்­தார்.

எடுத்­துக்­காட்­டாக, சிங்­கப்­பூரின் வர்த்­தக, தொழில் அமைச்­சின்கீழ் செயல்­படும் சிங்­கப்­பூர்-இந்­தியா பங்­கா­ளித்­துவ அலு­வ­ல­கத்தை அமைச்­சர் திரு கான் சுட்­டிக்­காட்­டி­னார்.

அந்த அலு­வ­ல­கம், இந்­தி­யா­வின் தொழில்­துறை தள­வா­டப் போக்­கு­வ­ரத்து பயி­லகக் கூட்­டமைப்­பை­யும் சிங்­கப்­பூர் தள­வா­டப் போக்­கு­வ­ரத்­துச் சங்­கத்தை­யும் ஒருங்கே கொணர்ந்து இரண்டும் சேர்ந்து இரு அனைத்து­லக கூட்டு சான்­றி­தழ் படிப்பைப் போதிக்க வழி செய்­யப்­பட்டுள்­ளது.

இந்­தியா-சிங்­கப்­பூர் இரு நாடு­க­ளின் கல்வி நிலை­யங்­களும் தொழிற்­துறை சங்­கங்­களும் சேர்ந்து தேர்ச்­சி­மிகு செயல்­திட்­டங்­களை உரு­வாக்கி அதன்­மூலம் எதிர்­கால தேவை­களை ஈடு­செய்ய முயல வேண்­டும் என திரு கான் வலி­யு­றுத்­தி­னார்.

இரு நாடு­க­ளின் பொரு­ளி­யல்­களில் புத்­தாக்­கத்தை மேம்­படுத்­து­வ­தில் புதிய தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் முக்­கிய பங்­காற்­று­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இந்த ஆண்­டின் நிர­லோட்­டம் நிகழ்ச்­சி­யில் சிங்­கப்­பூர்-இந்­திய தொழில்­நுட்ப புதிய நிறு­வ­னங்­கள் பங்­கெ­டுத்­துக்கொண்டு தங்­க­ளுடைய தீர்­வு­களை முன்­வைக்­கும்.

தலை­சி­றந்த தீர்­வு­களைக் காண்­பது அதன் நோக்­கம் என்று அவர் குறிப்­பிட்­டார்.

ஆகஸ்ட்­டில் நடக்­கும் நிர­லோட்ட இறு­திப் போட்­டி­யில் எல்லா தீர்­வு­களும் தாக்­க­லா­கும். அதைத் தான் ஆவ­லோடு எதிர்­பார்ப்­ப­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர்-இந்­தியா நிர­லோட்­டப் போட்டி இரு நாடு­க­ளுக்­கும் இடைப்­பட்ட மாண­வர்­கள், புதிய தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­று­க்கு இடையே புத்­தாக்­கத்­தி­லும் தொழில் முனைப்­பிலும் இருதரப்பு ஒத்­து­ழைப்­புக்கு மேலும் ஆத­ரவு அளிக்­கும் வகையில் நடக்­கிறது.

இது இந்­தத் தொட­ரில் 3வது போட்­டி­யா­கும்.