வலுவான நிலையில் சிங்கப்பூர் வங்கிகள்: ஆணையம் விளக்கம்

வலுவான நிலையில் சிங்கப்பூர் வங்கிகள்: ஆணையம் விளக்கம்

2 mins read
332bb0b1-e526-4bf4-92ca-0a271d0e515e
அமெ­ரிக்­கா­வில் அண்­மை­யில் நொடித்­துப்போன சிலிக்­கன் வேலி பேங்க், சிங்­நேச்­சர் பேங்க் ஆகி­யவை கார­ண­மாக சிங்­கப்­பூர் வங்கி முறைக்கு குறிப்­பி­டத்­தக்க அள­வுக்குத் தாக்­கம் எது­வும் இல்லை என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அமெ­ரிக்­கா­வில் அண்­மை­யில் இரு வங்­கி­கள் மூடப்­பட்டு இருக்­கின்­றன. இந்­தச் சூழ­லில் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டது.

சிங்­கப்­பூ­ரின் வங்கி முறை தொடர்ந்து மிக வலு­வாக இருந்து வரு­கிறது என்­றும் அது மீள்­திறனு­டன் தொடர்ந்து திகழ்ந்து வரு­கிறது என்­றும் ஆணை­யம் தெரி­வித்து இருக்­கிறது.

சிங்­கப்­பூர் வெள்ளி நாண­யச் சந்­தை­யும் அந்­நி­யச் செலா­வணி சந்­தை­யும் தொடர்ந்து நல்ல முறை­யில் செயல்­பட்டு வரு­வதை­யும் அது சுட்­டி­யது.

உள்­நாட்டு நிதி முறையை அணுக்­க­மா­க ஆணை­யம் கண்­கா­ணித்து வரு­கிறது.

அது போலவே அனைத்­து­லக நில­வ­ரங்­க­ளை­யும் அது கண்­காணித்து வரு­கிறது.

எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பு­டன் ஆணை­யம் அணுக்­கத் தொடர்­பில் இருந்து வரு­கிறது.

அனைத்­து­லக நில­வ­ரங்­கள் கார­ண­மாக சிங்­கப்­பூ­ரின் புதிய நிறு­வ­னங்­களில் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கங்­களை ஆணை­யம் இதன்­ மூ­லம் மதிப்­பிட்டு வரு­கிறது.

அத்­த­கைய தாக்­கங்­கள் குறிப்­பி­டத்­தக்க அள­வுக்கு எது­வும் இல்லை என்­பது தெரி­ய­வந்து இருக்­கிறது.

தானும் இதர அர­சாங்க அமைப்­பு­களும் நில­வ­ரங்­களை அணுக்­க­மாக கண்­கா­ணித்து வரப்­போ­வ­தா­க­வும் ஆணையம் தெரி­வித்து இருக்­கிறது.

அமெ­ரிக்­கா­வில் அண்­மை­யில் நொடித்­துப்போன சிலிக்­கன் வேலி பேங்க், சிங்­நேச்­சர் பேங்க் ஆகி­யவை கார­ண­மாக சிங்­கப்­பூர் வங்கி முறைக்கு குறிப்­பி­டத்­தக்க அள­வுக்குத் தாக்­கம் எது­வும் இல்லை என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது.

சிங்­கப்­பூர் வங்­கி­கள் வலு­வான மூல­த­னத்­தைக் கொண்­டவை. வட்டி விகி­தத்­திற்­கும் இதர இடர்­க­ளுக்­கும் எதி­ராக அவை காலக்­கி­ரம முறைப்­படி நெருக்­கு­தல் சோத­னை­களை நடத்தி வரு­கின்­றன.

சிங்­கப்­பூர் வங்­கி­க­ளின் பண பலம் வலு­வாக இருக்­கிறது. சிங்­கப்­பூர் வங்­கி­க­ளுக்கு நிலை­யான பல­மு­னைப்­ப­டுத்­தப்­பட்ட நிதி அடித்­த­ளம் இருக்­கிறது என்­ப­தை­யும் ஆணை­யம் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

இந்­தச் சாதக அம்­சங்­கள் கார­ண­மாக சிங்­கப்­பூர் வங்கி முறை அனைத்­து­லக நிதி நில­வ­ரங்­கள் மூலம் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கங்­களைச் சமா­ளித்­து­வி­டும் நிலை­யில் உள்ளன என்­றும் ஆணை­யம் தெரி­வித்து இருக்­கிறது.

அமெ­ரிக்க ஒழுங்­கு­முறை அதி­கா­ரி­கள், சிலிக்­கன் வேலி வங்­கியை மூடி­விட்­டார்­கள். அது 2008ஆம் ஆண்­டில் ஏற்­பட்ட நிதி நெருக்­க­டிக்­குப் பிறகு ஆகப் பெரிய வங்கி பிரச்­சி­னை­யாகத் தெரி­கிறது.

புதி­தாக தொடங்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு நிதி­யு­தவி அளித்து வந்த சிலிக்­கன் வேலி வங்­கிக்கு US$209 பில்­லி­யன் சொத்து இருந்­தது.

2022 முடி­வில் அத­னி­டம் ஏறக்­கு­றைய US$175.4 பில்­லி­யன் வைப்புத் தொகை இருந்­தது.

அதே­போல, நியூ­யார்க்­கில் செயல்­படும் சிக்­நேச்­சர் வங்­கி­யை­யும் ஒழுங்­கு­முறை அதி­கா­ரி­கள் ஞாயிற்­றுக்­கி­ழமை மூடி­விட்­ட­னர்.

சிலிக்­கன் வேலி வங்கி செயல்­பட இய­லாத அள­வுக்கு தோற்­றுப் போனதை அடுத்து அதை மூடி­விட்ட அதி­கா­ரி­கள் அதில் பணம் போட்டு வைத்­தி­ருந்த அனை­வருக்­கும் கூடி­ய­வி­ரை­வில் போட்ட பணம் கிடைக்­கும் என்று உத்­த­ர­வா­தம் அளித்­த­னர்.

அந்த அறி­விப்பு வெளி­யான சில மணி­ நேரத்திலேயே அடுத்த அறி­விப்­பாக சிக்­நேச்­சர் வங்­கி­யும் நொடித்­துப்­போன விவ­கா­ரம் இடம்­பெற்­றது.

இந்த வங்­கிக்கு $110 பில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட சொத்­து­கள் இருக்­கின்­றன. சிங்­நேச்­சர் வங்கி நொடித்­துப் போன சம்­ப­வம், அமெ­ரிக்க வங்கி வர­லாற்­றில் இத்தகைய ஆகப் பெரிய மூன்­றா­வது சம்­ப­வ­மாக இருக்­கிறது.