தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுமியை வளர்க்க வளர்ப்புப் பெற்றோருக்கு அனுமதி

2 mins read
aa7d9349-6137-48b4-a99f-fcb83a0fecdf
அச்­சி­றுமி யாரி­ட­மி­ருந்­தால் நன்­றாக இருப்­பார் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு ஆராய்ந்த பிறகு, சிறுமியை இது­வரை வளர்த்­த­வர்­க­ளி­ட­ம் இருப்­ப­து­தான் அவ­ரது நல்­வாழ்­வுக்­குச் சிறந்­தது என்று முடி­வெ­டுத்­தது.படம்: பிக்ஸாபே -

பெற்­றோர் இரு­வ­ரும் சிறை­யில் இருந்­த­போது, அவர்­க­ளின் பெண் பிள்­ளையை வளர்க்க முன்­வந்த வளர்ப்­புப் பெற்­றோரே இப்­போது எட்டு வய­தா­கும் அந்­தச் சிறு­மி­யைத் தொடர்ந்து வளர்க்­க­லாம் என்று குடும்ப நீதி­மன்­றம் அனு­மதி அளித்­துள்­ளது.

இந்த முடி­வை அச்­சி­று­மி­யின் உண்­மை­யான தந்தை ஆட்­சேபம் தெரிவித்துள்ளார்.

அச்­சி­றுமி யாரி­ட­மி­ருந்­தால் நன்­றாக இருப்­பார் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு ஆராய்ந்த பிறகு, சிறுமியை இது­வரை வளர்த்­த­வர்­க­ளி­ட­ம் இருப்­ப­து­தான் அவ­ரது நல்­வாழ்­வுக்­குச் சிறந்­தது என்று முடி­வெ­டுத்­தது.

அத­னை­யொட்டி, குடும்ப நீதி­மன்­றம் தனது தீர்ப்பை அளித்­துள்­ளது.

போதைப் பொருள் குற்­றத்­துக்­காக சிறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்த சிறு­மி­யின் உண்­மை­யான தந்தை இப்­போது தனது பிள்­ளைக்கு உரிமை கொண்­டாடி, வழக்கு தொடுத்­துள்­ளார்.

தனது தீர்ப்பு குறித்து எழுத்­து­பூர்­வ­மாக விளக்­க­ம­ளித்த மாவட்ட நீதி­பதி ஜேசன் கேபி­ரி­யல் சியாங், "இது எளி­தாக எடுக்­கப்­பட்ட முடி­வல்ல. சிறு­மியை வளர்ப்­ப­தில் வளர்ப்­புப் பெற்­றோர் காட்­டிய அர்ப்­ப­ணிப்­பை­யும் அக்­க­றை­யை­யும் என்­னால் உணர முடிந்­தது.

"அதே நேரத்­தில், உண்­மை­யான தந்­தை­யின் நிலை­யும் பரி­தா­பத்­துக்­கு­ரி­ய­தாக உள்­ளது. பிள்­ளையை வளர்க்­கும் பொருட்டு, அவர் தனது கடந்­த­காலத் தவ­று­களை உணர்ந்து போதைப் பழக்­கத்­தி­லி­ருந்து வில­கி­யி­ருக்க அவர் காட்­டிய கடப்­பாட்­டை­யும் நான் பாராட்­டு­கி­றேன். ஆனால் இங்கு சிறு­மி­யின் சிறந்த நல்­வாழ்­வு­தான் முக்­கி­ய மாகக் கருதப்படுகிறது. அத­னைக் கருத்­தில் கொண்­டு­தான் இந்­தத் தீர்ப்பு வழங்­கப்­பட்­டது," என்­றார்.

நீதி­மன்­றத்­தின் தீர்ப்பை எதிர்த்து உண்­மை­யான தந்தை மேல்மு­றை­யீடு செய்­துள்­ளார்.

முப்­பது வய­து­களில் உள்ள வளர்ப்­புப் பெற்­றோர் இரு­வ­ருக்­கும் சொந்தப் பிள்­ளை­கள் இல்லை. 2014ஆம் ஆண்­டில் அச்­சி­றுமி பிறக்­கும்­போது அவ­ரது உண்­மை­யான தாயார் சிறை­யில் இருந்­தார். ஒரு மாதக் குழந்­தை­யாக இருந்­த­போது அவர் வளர்ப்­புப் பெற்­றோ­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டார். அதன் பிறகு, அந்த வளர்ப்­புப் பெற்­றோர் வெவ்­வேறு குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மற்ற இரு பிள்­ளை­க­ளை­யும் வளர்த்து வரு­கின்­ற­னர்.