காணவில்லை என்று புகாரளிக்கப்பட்ட 42 வயது ஆடவரின் உடல் உபின் தீவு கடற்பகுதியில் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்தீவின் தென்மேற்குப் பகுதியில் திங்கட்கிழமை முற்பகல் 11.45 மணிக்கு மூழ்கியதாக நம்பப்பட்ட அந்த ஆடவர் பற்றி காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை திங்கட்கிழமை பிற்பகல் 12.20 மணிக்குத் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. ஏழு மணிநேரம் கழித்தும் உடலைக் கண்டுபிடிக்கவில்லை என்பதால் தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
பின்னர் நேற்று காலை பொதுமக்களில் ஒருவர் உடல் மிதந்துவருவதைப் பார்த்து காவல்துறையை அழைத்தார்.

