எலிக்கான பசைப்பொறியில் சுமார் 1,000 பறவைகள் சிக்கின

எலிக்கான பசைப்பொறியில் சுமார் 1,000 பறவைகள் சிக்கின

1 mins read
522380c6-abb0-4142-bee0-800c56662794
-

எலி, பல்­லி­க­ளுக்­கான பசைப்­பொறி­களில் எலி, பல்­லி­யைத் தவிர பற­வை­கள், வன­வி­லங்­கு­கள் என பல­வும் வந்து சிக்­கிக்­கொள்­கின்­றன என்று ஏக்­கர்ஸ் எனப்­படும் விலங்­கு­நல ஆய்வு, கல்­விச் சங்­கத்­தின் இணைத் தலைமை நிர்­வாகி அன்­ப­ரசி பூபா­லன் தெரி­வித்­துள்­ளார்.

2022ஆம் ஆண்டு டிசம்­பர் முதல் இது­போன்ற 85 சம்­ப­வங்­கள் பற்றி ஏக்­கர்ஸ் அமைப்­புக்­குத் தக­வல் கிடைத்­தது. அது ஒரு நாளைக்கு ஒரு சம்­ப­வத்­துக்­குச் சமம்.

2020ஆம் ஆண்டு முதல் இவ்­வாண்டு பிப்­ர­வரி வரை 985 சம்­ப­வங்­கள் பற்றி ஏக்­கர்­ஸுக்கு தக­வல் கிடைத்­தது என்­றார் திருவாட்டி அன்­ப­ரசி.

கடந்த ஆண்­டு­களில் பொறி­யில் மாட்­டிக்­கொண்ட விலங்­கு­களில் 75%, மீன்­கொத்தி பற­வை­கள், புறாக்­கள், மைனா பற­வை­கள், உடும்­பு­கள், பாம்­பு­கள், தவ­ளை­கள், அணில்­கள், வௌவால்­கள் போன்­ற­வை­யும் அடங்­கும்.

பொறி­யி­லி­ருந்து தன்னை விடு­வித்­துக்­கொள்ள விலங்­கு­கள் கடு­மை­யாக முய­லும்­போது, அவற்­றின் தோல், எலும்புகள், உடல் உறுப்பு­கள் போன்­றவை பாதிக்­கப்­ப­டு­கின்­றன. சில மடிந்தும் விடுகின்றன என்றார் திருவாட்டி அன்பரசி.