சளிக்காய்ச்சல் சம்பவங்கள் அதிகரிப்பு

சளிக்காய்ச்சல் சம்பவங்கள் அதிகரிப்பு

1 mins read
ee71c383-90bb-4ae4-8468-b49b6e029c8e
படம்: ISTOCKPHOTO -

சிங்­கப்­பூ­ரில் பலர் கடந்த சில மாதங்­க­ளாக சளிக்­காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மருத்­து­வ­ரைப் பார்க்­கும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை 30% வரை அதி­க­ரித்­துள்­ளது.

அதி­க­மா­னோர் பய­ணங்­களை மேற்­கொள்ள தொடங்­கி­யி­ருப்­பது இதற்கு ஒரு கார­ண­மா­கக் கூறப்­ப­டு­கிறது.

அவ்­வாறு அவர்­கள் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்­ளும்­போது, தங்­கள் உடல் நல­னில் காட்­டும் அக்­கறை குறைந்­து­வி­டு­வ­தால் எளி­தில் சளிக்­காய்ச்­ச­லுக்கு ஆளா­கி­றார்­கள் என்று சுகா­தா­ரத் துறை நிபு­ணர்­கள் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­த­னர்.

இது­பற்றி கூறு­கை­யில், ஹெல்த்வே மருத்­து­வக் குழு­மத்­தின் தலை­வர் டாக்­டர் பிலிப் கோ, "2022 டிசம்­பர் முதல் சளிக்­காய்ச்­ச­லுக்­காக மருத்­து­வரை நாடும் நோயா­ளி­க­ளின் விகி­தம் 20% முதல் 30% வரை கூடி­யுள்­ளது.

"ஒரு­வ­ருக்கு உடல்நல­மில்­லா­மல் இருந்­தும் அவர் பள்­ளிக்கோ வேலைக்கோ செல்­லும்­போது அவர் பல­ருக்கு தன்­னி­டம் உள்ள நோய்க் கிரு­மி­க­ளைப் பரப்­பு­கி­றார். அத­னால் மேலும் பலர் நோய்­வாய்ப்­ப­டு­கின்­ற­னர்," என்றார் அவர்.