குடும்பச் சேவை திட்டம் விரிவாக்கம்: பிள்ளைகள், முதியோர் கவனிப்பு உள்ளடக்கம்

குடும்பச் சேவை திட்டம் விரிவாக்கம்: பிள்ளைகள், முதியோர் கவனிப்பு உள்ளடக்கம்

2 mins read
72ceaac4-5105-4baf-8af7-2951f82166e7
-

குடும்­பச் சேவை திட்­டத்­தில் பிள்ளை­க­ளை­யும் முதி­யோ­ரை­யும் கவ­னித்­துக்­கொள்­ளும் ஒரு செயல்­திட்­டம் இரண்டு ஆண்டு முன்­னோடித் திட்­ட­மாக சேர்க்­கப்­படு­கிறது.

மனி­த­வள அமைச்சு நேற்று இத­னைத் தெரி­வித்­தது. அந்த முன்­னோ­டித் திட்­டத்­தில் பங்கு கொள்­ளும் நிறு­வ­னங்­கள், இப்­போது மேலும் பல வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்தி அத்­த­கைய பகுதி நேர சேவை­க­ளைக் குடும்­பங்­க­ளுக்கு வழங்­க­லாம்.

குடும்­பச் சேவை திட்­டத்­தின்­கீழ் 140 நிறு­வ­னங்­கள் இப்­போது 21,000க்கும் மேற்­பட்ட குடும்பங்­களுக்­குச் சேவை வழங்­கு­கின்றன.

இந்­தத் திட்­டம் 2017ல் முன்­னோ­டித் திட்­ட­மாக நடப்­புக்கு வந்து 2021 செப்­டம்பரில் நிரந்­த­ரத் திட்­ட­மா­கி­யது. இப்­போது இத்­திட்­டம் விரி­வடைந்­துள்­ளது.

இதன்­படி, ஒன்­றரை வயது நிரம்­பிய பிள்­ளை­க­ளைக் கவனித்­துக்­கொள்­வோ­ரின் பணி­களில் பிள்­ளை­க­ளுக்­குச் சாப்­பாடு கொடுப்­பது, உடை அணி­விப்­பது, உறிஞ்சு ஆடை­களைக் கழற்றி மாட்­டு­வது ஆகி­யவை உள்­ள­டங்கும்.

பிள்­ளை­களை கல்வி மேம்­பாட்டுச் செயல்­களில் ஈடு­படுத்­து­வ­தும் அவர்­க­ளின் இதர பணி­க­ளாக இருக்­கும்.

அதே­போல, முதி­யோரைக் கவ­னித்­துக்­கொள்­வோர், அவர்­களைக் குளிப்­பாட்டுவது, சாப்­பாடு கொடுப்­பது, உடை அணி­விப்­பது உடல்­ந­லத்­துக்கு ஏற்ற நட­வ­டிக்­கை­களில் அவர்­களை ஈடு­ப­டுத்­து­வது போன்­ற­வற்றைச் செய்ய வேண்டி இருக்­கும்.

சக்­கர நாற்­கா­லி­யைப் பயன்­ப­டுத்­தும் முதி­ய­வர்­க­ளைப் பொறுத்­த­வரை அவர்­களைப் பாது­காப்­பாக சக்­கர நாற்­கா­லி­களில் உட்­காரவைத்து, தள்­ளிச் செல்ல வேண்­டிய பொறுப்­பும் அத்­த­கைய ஊழி­யர்­க­ளைச் சேர்ந்­த­தா­கும்.

புதிய முன்­னோடித் திட்­டத்­திற்­கான யோச­னை­களை வர்த்­தக நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து அமைச்சு பெற்­றது.

குடும்­பச் சேவை திட்­டத்­தில் கலந்­து­கொள்­ளும் நிறு­வ­னங்­கள் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை அமல்­ப­டுத்த வேண்­டி­யது முக்­கி­ய­மா­னது. குடும்­பத்­திற்­கான பரா­ம­ரிப்புத் தேவை­களை அவை மதிப்­பிட வேண்­டும்.

ஊழி­யர்­க­ளின் அனு­ப­வங்­களை­யும் தகு­தி­க­ளை­யும் குடும்­பத்­தி­டம் அந்த நிறு­வ­னங்­கள் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும்.

சுகா­தார அமைச்சு நிர்­ண­யித்து உள்ள பயிற்சித் தேவை­களை அந்த ஊழி­யர்­கள் நிறை­வேற்ற வேண்­டும்.

செயல்­திட்­டம் விரி­வ­டைந்து இருப்­பது பற்றிக் கருத்து கூறிய மனி­த­வள துணை அமைச்­சர் கான் சியாவ் ஹுவாங், இதன்­மூ­லம் குறிப்­பிட்ட நிறு­வ­னங்­களுக்குக் கூடு­த­லாக ஊழி­யர்­கள் கிடைப்­பார்­கள் என்றார்.

"அவர்­கள் பகு­தி­நேர பரா­மரிப்புச் சேவை­களை வழங்கி உத­வு­வார்­கள். இதன்­மூ­லம் குடும்­பங்­க­ளுக்கு அதிக வாய்ப்­பு­கள் கிடைக்­கும்.

"சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­கள் வேலை, குடும்பப் பொறுப்­பு­களுக்கு இடை­யில் சிறந்த முறை­யில் சம­நி­லை­யைக் காண இது உத­வும்.

"இந்த முன்­னோ­டித் திட்­டம் கண்­கா­ணிக்­கப்­பட்டு குடும்­பங்­கள், நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து கருத்­து­கள் பெறப்­பட்டு, மாற்­றம் ஏதே­னும் தேவை எனில் கவ­னித்­தில் கொள்­ளப்­படும் என்று மனி­த­வள துணை அமைச்­சர் மேலும் தெரி­வித்­தார்.