தனக்கு கார் பேட்டை முத்திரை கொடுக்கப்படவில்லை என்று சொல்லி தன் கூட்டுரிமை புளோக்கின் நிர்வாக அமைப்பை நீதிமன்றத்திற்கு இழுத்த ஒருவர் வழக்கில் தோல்வி அடைந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது நீதிமன்ற நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்திய ஒரு செயல் என்று தீர்ப்பில் குறிப்பிட்டார்.
மனோகர் கே.டி. நன்வானி என்பவர், போர்ட் கார்டன்ஸ் கூட்டுரிமை வீட்டில் 2022ல் குடியேறினார்.
போர்ட் ரோடு குடியிருப்புப் பேட்டைக்கு உட்பட்ட பதிவு பெற்ற உரிமையாளரின் முகவரியைக் காட்டும் வாகன விவர ஆவணத்தைக் கொண்டுள்ள குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே கார் பேட்டை முத்திரை கொடுக்கப்படும் என்பது அந்தக் கூட்டுரிமை நிர்வாகத்தின் துணைச் சட்டம்.
இதை எதிர்த்து அவர் வழக்குத் தொடுத்து தோற்றார்.
அந்தத் துணைச் சட்டம், கட்டட நிர்வாகம், பாட்டா நிர்வாகச் சட்டத்திற்கு முரணானது என்பதால் அது செல்லாது என்றும் அந்தத் துணைச் சட்டம் பாரபட்சமானது என்றும் வழக்கில் அவர் கோரினார்.

