அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை அதிகரிப்பு

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை அதிகரிப்பு

2 mins read
6ea0d685-7756-4a0b-8622-4f4bd432b604
ஆண்­டுக்கு ஒரு­முறை நடத்­தப்­படும் இந்­தக் கருத்­தாய்­வில் சென்ற ஆண்டு சிங்­கப்­பூ­ரில் உள்ள 1,135 பேர் கலந்­து­கொண்­ட­னர். அர­சாங்­கம்­தான் சிங்­கப்­பூ­ரில் ஆக அதிக நம்­பிக்­கை­யைப் பெற்­றுள்ள அமைப்பு என்­றும் அவர்­கள் கூறி­னர். படம்: சீன ஊடகக் குழுமம் -

கருத்தாய்வு முடிவுகள்: அரசுசாரா அமைப்புகள், வர்த்தகங்கள் மீதான நம்பிக்கை சரிவு

சிங்­கப்­பூ­ரர்­கள் அர­சாங்­கத்­தின்­மீது கொண்­டுள்ள நம்­பிக்கை சென்ற ஆண்டு அதி­க­ரித்­துள்­ளது.

எடெல்­மன் டிரஸ்ட் பாரோ­மீட்­டர் நடத்­திய கருத்­தாய்­வில் அது தெரி­ய­வந்­துள்­ளது. ஆண்­டுக்கு ஒரு­முறை நடத்­தப்­படும் இந்­தக் கருத்­தாய்­வில் சென்ற ஆண்டு சிங்­கப்­பூ­ரில் உள்ள 1,135 பேர் கலந்­து­கொண்­ட­னர். அர­சாங்­கம்­தான் சிங்­கப்­பூ­ரில் ஆக அதிக நம்­பிக்­கை­யைப் பெற்­றுள்ள அமைப்பு என்­றும் அவர்­கள் கூறி­னர்.

சென்ற ஆண்டு அர­சாங்­கத்­தின் மீதான மக்­க­ளின் நம்­பிக்கை இரண்டு விழுக்­காடு அதி­க­ரித்து 76 விழுக்­காடு ஆனது. அதே­வேளை­யில் அரசு சாரா அமைப்­பு­கள் மீதான நம்­பிக்கை மூன்று விழுக்­காட்­டுப் புள்­ளி­கள் குறைந்­தது. வர்த்­த­கங்­கள் மீதான நம்­பிக்­கை­யும் 2021ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இரண்டு விழுக்­காட்­டுப் புள்­ளி­கள் குறைந்­தது.

கருத்­தாய்­வின் முடி­வு­கள் நேற்று வெளி­யி­டப்­பட்­டன.

சிங்­கப்­பூ­ரின் தற்­போ­தைய தலை­மைத்­து­வம் உல­கப் பொரு­ளி­யல் சிக்­கல்­க­ளுக்கு இடையே நாட்­டைத் திற­மை­யாக வழி­ந­டத்­தும் என்ற மக்­க­ளின் நம்­பிக்­கை­யைக் காட்­டு­வ­தாக கருத்­தாய்வை நடத்­திய எடெல்­மன் நிறு­வ­னம் குறிப்­பிட்­டது.

மொத்­தம் 28 நாடு­களில் இந்­தக் கருத்­தாய்வு நடத்­தப்­பட்­டது. அவற்­றில், மக்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெற்ற அர­சாங்­கங்­க­ளின் பட்­டி­ய­லில் சிங்­கப்­பூர் அர­சாங்­கம் நான்­கா­வது இடத்­தைப் பிடித்­து உள்­ளது.

சீனா 89 விழுக்­காட்­டு­டன் முத­லி­டத்­தி­லும் ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­கள் 86 விழுக்­காட்­டு­டன் இரண்­டா­வது இடத்­தி­லும் 83 விழுக்­காட்­டு­டன் சவூதி அரே­பியா மூன்­றா­வது நிலை­யி­லும் உள்­ளன.

சிங்­கப்­பூ­ரில் அரசு சாரா அமைப்­பு­கள் மீதான நம்­பிக்கை 65 விழுக்­கா­டா­கப் பதி­வா­கி­யுள்­ளது. சுவீ­டன், ஜெர்­மனி, ஜப்­பான் ஆகி­ய­வற்­றை­விட இது அதி­கம்.

இங்கு வர்த்­த­கங்­கள் மீதான மக்­க­ளின் நம்­பிக்கை 62 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

கருத்­தாய்­வில் பங்­கு­பெற்ற 59 விழுக்­காட்­டி­னர் ஊட­கங்­கள் மீது நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­னர்.

உல­கெங்­கும் 32,000 பேரி­டம் சென்ற நவம்­ப­ரில் இந்­தக் கருத்­தாய்வு நடத்­தப்­பட்­டது.