போதைப்பொருள்கள், ஆயுதங்களுடன் சிங்கப்பூரர்கள் மூவர் கைது

1 mins read
630921bc-7c2d-4261-82c1-a578863ea2e3
-
multi-img1 of 3

உபி அவென்யூ 1, புக்­கிட் தீமா ஆகிய பகு­தி­களில் மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் நடத்­திய சோத­னை­யில் $118,000 மதிப்­புள்ள போதைப்­பொ­ருள்­க­ளோடு கைத்­துப்­பாக்கி, கத்தி­கள், வாள்­கள் போன்ற ஆயு­தங்­களும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

போதைப்­பொ­ருள் கடத்­திய சந்­தே­கத்­தின் பேரில் சிங்­கப்­பூ­ரர்­கள் மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த திங்­கட்­கி­ழமை உபி அவென்யூ 1ல் நடை­பெற்ற சோதனை நட­வ­டிக்­கை­யில் 32 வயது ஆட­வ­ரும் 22 வய­துப் பெண்­ணும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

கைப்­பற்­றப்­பட்ட போதைப்­பொ­ருள்­களில் பெரும்­ப­கு­தி­யும் அவற்­றைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு உரிய கரு­வி­களும் பல்­வேறு வகை­யான ஆயு­தங்­களும் அவர்­க­ளி­டம் இருந்து பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ஆபத்­தான ஆயு­தங்­களை வைத்­தி­ருந்­த­தன் தொடர்­பில் அந்த ஆட­வ­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.

புக்­கிட் தீமா­வில் 'ஐஸ்' போதைப்­பொ­ருள் வைத்­திருந்த 32 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்­டார்.

ஆயு­தங்­கள் வைத்­தி­ருக்­கும் போதைப்­பொ­ருள் கடத்­தல்­கா­ரர்­கள் அதி­கா­ரி­க­ளின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக விளங்­கு­வ­தாக மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு குறிப்­பிட்­டது.

இருப்­பி­னும், இதனால் அதிகாரிகள் தங்கள் கடமையை ஆற்றுவதிலிருந்து பின்வாங்கமாட்டார்கள் என்று அது கூறி­யது.

சிங்­கப்­பூ­ரில் போதைப்­பொ­ருள் கிடைப்­ப­தைத் தடுப்­பது தொடர்­பான நட­வ­டிக்­கை­களில் அதி­கா­ரி­கள் தொடர்ந்து ஈடு­ப­டு­வர் என்று மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு கூறி­யது.

கைது செய்­யப்­பட்ட மூவ­ரி­ட­மும் விசா­ரணை தொடர்­கிறது.

சிங்­கப்­பூர் சட்­டத்­தின்­கீழ், நாட்­டிற்­குள் யாரே­னும் 250 கிராம் அள­வி­லான மெத்த­ஃபிட்­ட­மின் அல்­லது 500 கிராம் கஞ்­சா­வைக் கடத்­தி­யது நிரூ­பிக்­கப்­பட்­டால் அவர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­படும்.