மலேசிய நடிகர் தாக்கப்பட்டது குறித்து மனைவி கலக்கம்

மலே­சிய நடி­கர் கமால் அட்லி கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சிங்­கப்­பூ­ரில் தாக்­கப்­பட்­டது தொடர்­பான அதிர்ச்­சி­யில் இருந்து தம்­மால் இன்­னும் மீள­மு­டி­ய­வில்லை என்று அவ­ரது மனைவி உகாஷா சென்­ரோஸ் (படம்) கூறி­யி­ருக்­கி­றார்.

மலே­சிய நடி­கை­யான இவர், நேற்று முன்­தி­னம் டிக்­டாக் நேர­லை­யில் இவ்­வாறு கூறி­னார்.

தம்­மால் உண்­ணவோ உறங்­கவோ முடி­ய­வில்லை என்று கூறிய உகாஷா, அறி­மு­க­மற்­ற­வர்­களு­டன் படம் எடுக்­க தமக்கு பய­மாக இருப்­ப­தா­க­க் குறிப்­பிட்­டார்.

படுக்­கைக்­குச் செல்­லும்­போதெல்­லாம் தம் கண­வ­ரைத் தாக்­கி­ய­வ­ரின் நினைவு வரு­வதால் உறக்­கம் வர­வில்லை என்று உகாஷா சொன்­னார்.

சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை சிங்­கப்­பூர் எக்ஸ்­போ­வில் நடை­பெற்ற நிகழ்ச்­சிக்­குப் பிறகு, இரவு 9 மணி­ய­ள­வில் ரசி­கர்­க­ளு­டன் பேசிக்­கொண்­டி­ருந்த கமாலை ஆட­வர் ஒரு­வர் தடியால் தாக்­கி­யதாகக் கூறப்பட்டது.

இதில் காயமடைந்த கமால் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவருக்குத் தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தாக்கியதாகக் கூறப்படும் 33 வயது ஆடவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

அவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!