நீதித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்

1 mins read
3dadb50e-4e17-488e-8b93-b539832cafa3
-

தலைமை நீதி­பதி சுந்­த­ரேஷ் மேனன் கடந்த திங்­கள், செவ்­வாய்க்­கி­ழ­மை­களில் இந்­தோ­னீ­சி­யத் தலை­ந­கர் ஜகார்த்தாவிற்­குப் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்­தார். அந்­நாட்­டுத் தலைமை நீதி­பதி முக­மது சைரி­ஃபு­தீனை அவர் சந்­தித்­தார்.

இரு­த­ரப்பு நீதித்­துறை உறவு­க­ளை­யும் ஆசி­யான் நாடு­க­ளுக்கு இடை­யி­லான பங்­கா­ளித்­து­வத்­தை­யும் வலுப்­ப­டுத்­து­வது திரு மேன­னின் பயண நோக்­கம் என்று சிங்­கப்­பூர் உச்ச நீதி­மன்­றம் தெரி­வித்­தது.

அனைத்­து­லக வர்த்­தக சர்ச்­சை­க­ளுக்­குத் தீர்­வு­காண்­ப­தற்­கான கட்­ட­மைப்பை உரு­வாக்கு­வது குறித்து இரு தலைமை நீதி­ப­தி­களும் கலந்­து­ரை­யா­டி­னர். இரு நாட்டு நீதி­மன்­றங்­க­ளுக்கு இடையே மேற்­கொள்­ளப்­படும் தொடர்பு, எல்­லை­தாண்­டிய நொடித்­துப்­போ­தல் சம்­ப­வங்­கள், வர்த்­தக நீதி­மன்­றங்­கள் ஆகி­யவை தொடர்­பில் ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்­து­வது குறித்­தும் இரு­வ­ரும் கலந்­து­ரையாடினர்.

இந்­தோ­னீ­சிய உச்ச நீதி­மன்ற நீதி­ப­தி­கள் முன்­னி­லை­யில் தலைமை நீதி­பதி மேனன் உரை­யாற்­றி­னார்.

ஆசி­யான் வழக்­க­றி­ஞர் சங்­கத் தலை­வ­ரு­மான திரு மேனன், ஆசி­யான் தலை­மைச் செய­லா­ளர் காவ் கிம் ஹூனை­யும் சந்­தித்­துப் பேசி­னார்.