உட்லண்ட்ஸ் கார் விபத்து: ஓட்டுநருக்கு வலிப்பு நோய்

உட்லண்ட்ஸ் கார் விபத்து: ஓட்டுநருக்கு வலிப்பு நோய்

1 mins read
d456f0ca-559d-458b-ba7b-9dc6488b44fe
-

வலிப்பு நோய் உள்ள ஒரு­வர் வாக­னம் ஓட்ட வேண்­டாம் என அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருந்­தார்.

ஆனால் முகம்­மது ஹாடி சஸாலி என்ற அந்த நபர் அதை­யும் மீறி காரை ஓட்டியிருக்கிறார்.

அதன் விளை­வாக கடந்த 2022ஆம் ஆண்டு செப்­டம்­பர் 1ஆம் தேதி அவர் ஓட்­டிய கார் டவர் டிரான்­சிட் பேருந்து சேவை எண் 858 மீது மோதி விபத்­துக்கு உள்­ளா­னது.

அந்த விபத்­தில் திரு முகம்­மது ஹாடி­யும் காரில் இருந்த மற்­றொரு பயணி திரு­வாட்டி சாரியா பக்ரி என்­ப­வ­ரும் விபத்­தில் எற்­பட்ட காயங்­களால் மரண­மடைந்தனர்.

இந்த விபத்­து குறித்த விசா­ர­ணை­யில் விபத்­துக்கு முன்­னால் திரு ஹாடிக்கு வலிப்பு நோய் ஏற்­பட்­டதா என்­பதைக் கூற முடி­ய­வில்லை என்று மரண விசா­ர­ணை­யில் பங்­கேற்ற மருத்­து­வர் தெரி­வித்­தார்.

இத­னால், மரண விசா­ரணை அதி­காரி­யான ஷர்­மிளா ஸ்ரீபதி ஷனாஸ், 53 வயது திருவாட்டி சாரியா பக்­ரி­யின் மர­ணம் தற்­செ­ய­லா­னது என்று தீர்ப்­ப­ளித்­தார். ஆனால், திரு ஹாடி­யின் மர­ணம் குறித்து விசா­ர­ணை­யின் முடி­வில் அவர் எவ்­வி­தத் தீர்ப்­பும் கூற­வில்லை. எனினும், விசார ணையில் போக்குவரத்து காவல் துறை அதிகாரி எஸ்ஐ ரசிஸ் தாஹார், திரு ஹாடி வலிப்பு நோய்க்காக சிகிச்சை பெற்று வந்ததை சுட்டிக்காட்டினார். அத்துடன், வலிப்பு நோய்க்காக சிகிச்சை பெற்று வருவோர் வாகனம் ஓட்ட கூடாது என்றும் திரு ஹாடியும் அவ்வாறே அறிவுறுத்தப்பட்டார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.