ஐவர் கொல்லப்பட்ட தஞ்சோங் பகார் விபத்து

ஐவர் கொல்லப்பட்ட தஞ்சோங் பகார் விபத்து

3 mins read
b061ac09-7307-4a65-938a-4d9fb150d2df
-

தஞ்­சோங் பகா­ரில் ஐவர் கொல்­லப்­பட்ட மிக மோச­மான கார் விபத்­தில் தொடர்­பு­டைய பெண், ஆபத்­தான முறை­யில் கார் ஓட்­டிய குற்­றத்தை ஒப்­புக்­கொள்­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

2021 பிப்­ர­வரி 13ஆம் தேதி தஞ்­சோங் பகா­ரில் நிகழ்ந்த விபத்து சிங்­கப்­பூ­ரையே அதிர வைத்­தது.

இந்­தச் சம்­ப­வத்­துக்கு முன்பு 26 வயது பூ யி லின் வேக வரம்பை மீறி 109 கிலோ மீட்­டர் வேகத்­தில் 'பிஎம்­ட­பிள்யூ எம்4' காரை ஓட்­டி­யி­ருக்­கி­றார்.

இவ­ருக்கு அடுத்­த­தாக காரின் உரி­மை­யா­ள­ரான ஜோன­தன் லோங் ஜுன்­வெய், 29, காரை ஓட்­டி­ய­போ­து­தான் விபத்து நேர்ந்­தது. பூ யி லின் ஏற்­கெ­னவே காரி­லி­ருந்து இறங்­கி­விட்­ட­தால் அவர் உயிர் தப்­பி­னார்.

அதி­காலை 5.40 மணி­ய­ள­வில் திரு லோங் 182 கிலோ மீட்­டர் வேகத்­தில் காரை செலுத்­தி­னார். அந்த கார் சாலை­யில் சறுக்­கிச் சென்று கடை வீட்­டின் முன்பு மோதி வெடித்­தது.

திரு லோங்­கும் அவ­ரு­டன் சென்ற நான்கு பய­ணி­கள் வில்­சன் டியோ சி ஸியாங், 26, எல்­வின் டான் யோங் ஹாவோ, 28, இயூ­ஜின் யாங் ஷெங் மின், 29, கேரி வோங் ஹோங் சியா, 29, ஆகி­யோர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­த­னர்.

இதற்கு முன்பு அதி­காலை 5.35 மணி அள­வில் தஞ்­சோங் பகார் ரோட்­டில் அதே காரை பூ 109 கிலோ மீட்­டர் வேகத்­தில் ஓட்­டிப் பார்த்­தார் என்று நீதி­மன்ற விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

மலே­சி­ய­ரான பூ கடந்த வியா­ழக்­கி­ழமை சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வெளி­யேற விரும்­பி­னார். ஆனால் அதற்கு நீதி­மன்­றம் அனு­மதி வழங்­க­வில்லை.

கடந்த மார்ச் மாதம் அவர் மீது முறைப்­படி குற்­றம்­சாட்­டப்­பட்­டது. வரும் ஏப்­ரல் 3ஆம் தேதி அவர் குற்­றத்தை ஒப்­புக்கொள்­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஐவர் உயி­ரி­ழந்த மரண விசா­ர­ணை­யின்­போது பேசிய போக்­கு ­வ­ரத்து விசா­ரணை அதி­காரி ஃபிர்டாஸ் சுலை­மான், விபத்­துக்கு சற்று நேரத்­துக்கு முன்பு லோங்­கும் அவ­ரது நண்­பர்­களும் அங் மோ கியோ­வில் ஒன்­று­கூடி சீனப்­புத்­தாண்­டைக் கொண்­டா­டி­ய­தா­க­வும் அங்கு அவர்­கள் மது அருந்­தி­ய­தா­க­வும் தெரி­வித்­தார்.

பின்னர் தஞ்சோங் பகார் ரோட்டில் உள்ள ஹோங் ஜியா ஜாங் உணவகத்துக்கு அனை வரும் சென்றனர். உணவகத்திலும் அவர்கள் மது அருந்தினர். பின்னர் லோங் தனது புதிய பிஎம்டபிள்யூ காரை நண்பர் களுக்குக் காட்டினார். அப்போது ஒவ்வொருவராக காரை ஓட்டிப் பார்த்தனர்.

திரு யாப் முத­லில் காரை ஓட்­டிப் பார்த்­தார். உண­வ­கத்திலி­ருந்து கெப்­பல் வரை ஓட்­டிச்­சென்று எங்­கோர் ஸ்தி­ரீட்­டில் திருப்பி வந்­தார். மேக்ஸ்­வெல் சாலையை நோக்கி தஞ்­சோங் பகார் சாலை வழி­யா­கச் சென்ற பிறகு உண­வ­கத்­துக்கு அருகே அவர் காரை நிறுத்­தி­னார்.

திரு யாப் காரை 77 முதல் 88 கிலோ மீட்­டர் வேகத்­தில் ஓட்­டி­னார்.

பின்­னர் அதே வழி­யாக திரு பார்க் 59 கிலோ மீட்­டர் வேகத்­தில் காரை ஓட்­டிப் பார்த்­தார். இதே போல பூவும் காரை ஓட்­டி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

லோங் நான்­கா­வது ஓட்­டு­ நராக தனது நான்கு நண்­பர்­க­ளு­டன் காரை ஓட்­டிச்­சென்­ற­போது விபத்து நிகழ்ந்­தது.

லோங்­கின் காத­லி­யான 26 வயது ரேபி ஓ சியவ் ஹுவே கார் வெடித்து எரிந்து கொண்­டி­ருந்­த­போது காரில் சிக்­கி­ய­வர்­ க­ளுக்கு உதவி செய்ய முயற்­சித்­தார்.

ஆனால் தீயில் படு­கா­யம் அடைந்த அவர் மருத்­து­வ­ம­னை­யில் பல்­வேறு சிகிச்­சை­க­ளுக்­குப் பிறகு குண­ம­டைந்­துள்­ளார்.

லோங், யாப், டான் ஆகிய மூவ­ரும் கடு­மை­யான தீக்­கா­யத்­தால் உயி­ரி­ழந்­த­னர். மோச­மான தீக்­கா­யம் மற்­றும் முது­கெ­லும்பு காயத்­தால் டியோ மாண்­டார். வோங் கடு­மை­யான தீக்­கா­யத்­தா­லும் இடுப்பு எலும்பு காயத்­தா­லும் இறந்­தார்.