யோகா கற்றுக்கொள்ள வந்த மாணவியை மானபங்கப்படுத்தியதற்காக 'டிரஸ்ட் யோகா' நிறுவனத்தின் முன்னாள் யோகா பயிற்றுவிப்பாளருக்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டது.
2022 மே 22ஆம் தேதி நடந்த சம்பவத்தில் அவர் மாணவியின் பின்புறத்தைத் தட்டினார் என்று சொல்லப்பட்டது.
இந்திய நாட்டவரான குமார் அம்ரிட், 29, தன் மீது சுமத்தப்பட்ட மானபங்கக் குற்றச் சாட்டை ஒப்புக்கொண்டார்.
மானபங்கம் தொடர்பில் டிரஸ்ட் யோகா பயிற்றுவிப்பாளர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாவது இது இரண்டாவது முறை.
மற்றொரு இந்திய நாட்ட வரான ராஜ்பால் சிங், 33, ஐந்து பெண்ணை மானபங்கம் செய்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாமல் விசாரணை கோரியிருக்கிறார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தற்போதைய வழக்கில் 2022 ஏப்ரலில் குமாரால் பாதிக்கப்பட்ட பெண், தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் உள்ள டிரஸ்ட் யோகாவில் தனிப்பட்ட யோகா பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்திருந்தார்.
பின்னர் திரு மனோஜ் என்பவர் நடத்திய மூன்று யோகா வகுப்பில் அந்தப் பெண் பங்கேற்றார்.
2022 மே 22ஆம் தேதி குறிப்பிட்ட நேரத்தில் மனோஜ் இல்லாததால் குமாரின் வகுப்புக்கு அவர் சென்றார்.
பாதிக்கப்பட்டவரின் அனு மதியின்றி அவரது பின்புறத்தில் பயிற்றுவிப்பாளர் கைவைத்து அழுத்தினார்.
பாதிக்கப்பட்டவர் படுத்திருந்தபோது பின்புறத்தை அவர் அழுத்திப்பிடித்தார். குமார், அதிகம் பேசாமல் பெண்ணின் ஒரு அசைவிலிருந்து மற்றொரு அசைவுக்கு கையால் தொட்டு மாறச்செய்தார்.
இதனால் அதிர்ச்சி யடைந்த பெண் காவல்துறையில் புகார் அளித்தார் என்று விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

