தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிட்டார் சகாப்தம் அலெக்ஸ் அபிஷேகநாதன் காலமானார்

1 mins read
228d7ee2-d1db-4635-8b09-b44738af2cc5
அலெக்­சாண்­டர் எஸ். அபி­ஷே­க­நா­தன் காலமா­னார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் முன்­னோடி இசைக் கலை­ஞர்­களில் ஒரு­வ­ரும் கிட்­டார் சகாப்­த­மு­மான அலெக்­சாண்­டர் எஸ். அபி­ஷே­க­நா­தன் (படம்) நேற்று செயிண்ட் லியூக் மருத்­து­வ­ம­னை­யில் காலமா­னார்.

அவ­ருக்கு 97 வயது.

சிங்­கப்­பூர் வர­லாற்­றில் மிக முக்­கி­ய­மான கிட்­டார் இசைக்­

க­லை­ஞர் எனும் பெருமை திரு அபி­ஷே­க­நா­த­னைச் சேரும்.

அவ­ருக்கு ஒரு மனை­வி­யும் இரண்டு பிள்­ளை­களும் இருக்­கின்­ற­னர். பிர­பல பாடகி-நடிகை ஜெசிந்தா அபி­ஷே­க­நா­தன் இவ­ரு­டைய மகள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

திரு அபி­ஷே­க­நா­த­னின் மர­ணம் பலரை மீளாத் துய­ரில் ஆழ்த்­தி­யுள்­ளது. சமூக வலைத்­த­ளங்­களில் பலர் தங்­கள் ஆழ்ந்த அனு­தா­பங்­க­ளைத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

1926ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரில் பிறந்த திரு அபி­ஷே­க­நா­தன் இசைக்­க­லை­ஞ­ராக, இசை­ய­மைப்­பா­ள­ராக, கல்­வி­யா­ள­ராக முத்­திரை பதித்­த­வர்.

கிட்­டார் வாசிப்­பதை அவர் சொந்­த­மா­கவே கற்­றுக்­கொண்­டார் என்­பது குறிப்­பி­டத்­தக்கது.

உள்­ளூர் இசைத்­து­றைக்கு அவர் ஆற்­றிய பெரும் பங்­க­ளிப்­புக்­காக திரு அபி­ஷே­க­நா­த­னுக்கு கலா­சா­ரப் பதக்­கம் வழங்­கப்­பட்­டது.