உரிமம் இல்லாமல் வேன் ஓட்டியவருக்குச் சிறை

உரிமம் இல்லாமல் வேன் ஓட்டியவருக்குச் சிறை

1 mins read
7ba58f1b-2d6a-4d1d-88a1-a2d8fea5027e
-

உரி­மம் இல்­லா­மல் வேன் ஓட்­டிய குற்­றத்­துக்­காக 33 வயது ரிசு­வான் ரோமாட்­டுக்கு விதிக்­கப்­பட்ட அப­ரா­தம், ஐந்து வாரச் சிறைத் தண்­ட­னை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. தமது மனைவி, மூன்று பிள்­ளை­க­ளை­யும் ஏற்­றிக்­கொண்டு, மழை பெய்­து­கொண்­டி­ருந்­த­போது அவர் வேன்

ஓட்­டிச் சென்­றார்.

காவல்­து­றை­யி­னர் அவ­ரைத் துரத்­தி­ய­போது அடுக்­கு­மாடி வாகன நிறுத்­து­மி­டத்­தில் வேனை நிறுத்தி, தமது குடும்­பத்­தாரை அங்­கேயே விட்­டு­விட்டு தப்பி ஓடி­னார் ரிசு­வான்.