தமிழ் ஆசிரியரின் ஊக்கத்தால் நான் இப்போதுதான் தமிழ் முரசின் சேவைகளைப் பயன்படுத்த தொடங்கியிருக்கிறேன்.
தமிழ் முரசில் இவ்வளவு புதிய நவீனமான சேவைகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளும்போது ஆனந்தமாக இருக்கிறது.
எனக்கு வலையொலி மிகவும் பிடித்திருக்கிறது. அதில் காற்பந்துச் செய்திகள் மற்றும் கருத்துகளைப் பற்றி நான் தெரிந்துகொள்கிறேன்.
தமிழ் முரசு படிப்பதனால் என் நேரத்தை நான் பயனுள்ள வழியில் கழிக்கிறேன். மேலும் சிங்கப்பூரைப் பற்றியும் உலக செய்திகளைப் பற்றியும் அதிகம் தெரிந்துகொள்கிறேன். இதை என்னுடைய வாழ்க்கையிலும் கல்வியிலும் பயன்படுத்துவேன்.
தமிழ் முரசில் பல தமிழ் மொழி விழா போட்டிகளைப் பற்றிய செய்திகளையும் நான் படித்தேன்.
இவ்வாண்டு அதில் கலந்துகொண்டு பற்பல பரிசுகளை வெல்ல வேண்டும் என்று எனக்கு ஆசை.
கடந்த ஆண்டுகளில் பங்கேற்ற மாணவர்களைப் பார்க்கும்போது எனக்கும் கலந்துகொள்ளவேண்டும் என்ற ஊக்கம் ஏற்பட்டது.
-அண்ணாதுரை
அம்ருத்கிருஷ்ணா, 15.

