செயற்கை நுண்ணறிவு, இணை­யப் பாது­காப்­பு: மாதர் சாதிக்க முடியும்

செயற்கை நுண்ணறிவு, இணை­யப் பாது­காப்­பு: மாதர் சாதிக்க முடியும்

1 mins read
6e14fbb0-b46d-47ba-b320-803462399827
-

செயற்கை நுண்­ண­றிவு, இணை­யப் பாது­காப்­புத் துறை­களில் வெற்­றி­பெ­று­வ­தற்­கான ஆற்­றல் பெண்­க­ளி­டம் உண்டு என்று தொடர்பு தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தெரி­வித்­தார்.

தக­வல் பாது­காப்பு பட்­டத்­தொ­ழி­லர்­கள் சங்­கம் ஏற்­பாட்­டில் நேற்று நடந்த 'இணை­யத்­தில் மக­ளிர் கருத்­த­ரங்­கம்' என்ற நிகழ்ச்சியில் உரை­யாற்­றிய அமைச்­சர், அந்த இரண்டு துறை­களும் இப்­போ­து­தான் பரி­ண­மித்து வரு­கின்­றன என்­ப­தை­யும் அவை இரண்­டும் ஒன்­று­டன் ஒன்று ஒத்­தவை என்­ப­தை­யும் சுட்­டி­னார்.

"அந்­தத் துறை­களில் தேர்ச்சி பெற கடும் முயற்சி வேண்­டும். கடும் உழைப்பு தேவைப்­படும். எளி­தான வழி எது­வும் இல்லை. விடாமுயற்சி அவ­சி­யம். துணி­கர உணர்­வும் ஆர்­வ­மும் தேவை. என்­னைப் பொறுத்­த­வரை அவற்­றுக்கு மாதர்­கள் நன்கு பொருத்­த­மா­ன­வர்­கள் என்­பதே எனது கருத்து," என்று அவர் கூறி­னார்.

திரு­வாட்டி டியோ, இணை­யப் பாது­காப்பு, அறி­வார்ந்த தேசம் இயக்­கத்­திற்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மா­வார்.

அந்­தக் கருத்­த­ரங்கு 2வது ஆண்­டாக இந்த ஆண்டு நடந்­தது. 'செயற்கை நுண்­ண­றிவு, இணை­யப் பாது­காப்­பில் முன்­னோடி: வழி வகுக்­கும் மாதர்­கள்' என்­பது கருப்­பொ­ருள்.