'சேமநிதி வாரிசு விவரப் பதிவு உயிலைப் போல் கையாளப்படும்'

'சேமநிதி வாரிசு விவரப் பதிவு உயிலைப் போல் கையாளப்படும்'

2 mins read
82a6e77b-aaaa-47b1-a010-5d65101d30b5
சேமநிதி உறுப்­பி­னர்­கள் மண­விலக்­கிற்­குப் பிற­கும் தங்­கள் முன்­னாள் கணவர் அல்­லது மனை­விக்கு பிள்ளை­களுக்குச் சேம­நி­திச் சேமிப்­பைக் கொடுக்க விரும்­பக்­கூ­டும் என்­பதே இதற்­கான கார­ணம் என்றார் அமைச்­சர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மத்­திய சேம­நிதி உறுப்­பி­னர்­கள், தங்கள் சேமிப்­பில் இருக்­கும் தொகை­யைத் தங்­க­ளுக்­குப் பிறகு யார் யார் எந்த அளவுக்குப் பெற வேண்­டும் என்­ப­தைக் குறிப்­பிட்டு தங்­கள் வாரி­சு­க­ளின் விவ­ரங்­க­ளைத் தாக்­கல் செய்­ய­லாம்.

அப்­படி அவர்­கள் தங்­க­ளின் வாரிசைக் குறிப்­பி­டு­வது, உயிலைப் போலவே கையா­ளப்­படும். உறுப்­பி­னர்­க­ள் பதிவு செய்­யும் வாரி­சு­க­ளின் பெயர்­கள் அவர்­களின் திரு­ம­ணத்தின் பேரில் ரத்து செய்­யப்­படும். ஆனால் மண­வி­லக்­கின் பேரில் ரத்து செய்­யப்­ப­டு­வ­தில்லை.

அவை உயில் போன்று கையா­ளப்­படு­வதே இதற்­கான கார­ணம். மனிதவள அமைச்­சர் டான் சீ லெங் நா22டாளு­மன்­றத்­தில் நேற்று இவ்வாறு தெரி­வித்­தார்.

உயில்­க­ளைப் போலவே மத்­திய சேம­நிதி வாரி­சுப் பதி­வு­களும் மண­வி­லக்கை அடுத்து ரத்து செய்­யப்­ப­டு­வ­தில்லை.

சேமநிதி உறுப்­பி­னர்­கள் மண­விலக்­கிற்­குப் பிற­கும் தங்­கள் முன்­னாள் கணவர் அல்­லது மனை­விக்கு பிள்ளை­களுக்குச் சேம­நி­திச் சேமிப்­பைக் கொடுக்க விரும்­பக்­கூ­டும் என்­பதே இதற்­கான கார­ணம் என்றார் அமைச்­சர்.

உறுப்­பி­னர்­க­ளின் வாரி­சுப் பெயர்ப் பதி­வு­கள் அவர்­க­ளின் திரு­ம­ணத்தை அடுத்து ரத்து செய்­யப்­படும். புதி­தாக வாரிசு பெயர்­க­ளைப் பதிய அவர்­களுக்கு வாய்ப்புக் கொடுப்­பதே இதன் நோக்­கம் என்று அல்­ஜு­னிட் குழுத் தொகுதி உறுப்­பி­னர் சில்­வியா லிம், மவுண்ட்­பேட்­டன் தொகுதி உறுப்­பி­னர் லிம் பியாவ் சுவான் இரு­வருக்­கும் அளித்த பதி­லில் அமைச்­சர் தெரி­வித்­தார்.

உயர்நீதி­மன்ற நீதி­பதி ஒரு­வர் இந்த மாதத் தொடக்­கத்­தில் ஒரு கருத்து தெரி­வித்திருந்­தார்.

சேமநிதி உறுப்­பி­னர்­கள் முன்ன தாகவே பதிந்து வைத்திருக்கும் வாரி­சுப் பெயர் பதி­வு­கள் உறுப்­பி­னர்­களின் திரு­மணத்தின்­பே­ரில் ரத்து செய்­யப்­ப­டு­கின்­றன. ஆனால் மண­வி­லக்­கின் பேரில் ரத்து செய்­யப்­ப­டு­வதில்லை. இது குழப்­ப­மாக இருக்­கிறது என்று அந்த நீதி­பதி குறிப்பிட்டார்.

இதை­ய­டுத்து நாடாளுமன்றத்தில் உறுப்­பி­னர்­களின் கேள்­வி­யும் அமைச்­சரின் விளக்­க­மும் இடம்பெற்றன.

மன்­றத்­தில் இந்த விவ­கா­ரம் பற்றி விளக்­கிய அமைச்­சர், "சேம­நிதி வாரி­சுப் பதி­வு­க­ளைப் பற்றி பரி­சீ­லிக்­கும்­படி சேம­நி­திக் கழ­கம் அனைத்து உறுப்­பி­னர்­களுக்­கும் அனுப்­பும் வரு­டாந்­திர கணக்கு அறிக்­கை­யில் நினை­வூட்டும்.­

"மண­வி­லக்கு பெற்­ற­வர்­க­ளுக்­கும் வாரிசு பரி­சீ­லனை பற்றி நினை­வூட்ட சேம­நி­திக் கழ­கம் விரும்­பு­கிறது," என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சேமநிதி உறுப்­பி­னர்­கள் தங்­கள் வாழ்க்கைச் சூழல் மாற்­றங்­க­ளின்­போது சேம­நி­திக் கணக்கு வாரிசு பற்றி மறு­பரி­சீ­லனை செய்து வாரிசு விவ­ரங்­க­ளைப் புதுப்­பிக்க வேண்­டும் என்று அமைச்­சர் டான் கூறி­னார்.

இதை வச­தி­யாக, பாது­காப்­பாக மத்­திய சேம­நிதி இணை­யத்­தளம் வழி­யா­க­ செய்து­கொள்ளவும் கழ­கம் ஏற்பாடு களைச் செய்துள்­ளது என்­றா­ர­வர்.