பள்ளிக்கு வராததை மட்டும் வைத்து தன் அதிகாரத்தை சிறார் பாதுகாப்புச் சேவை பயன்படுத்த இயலாது: அமைச்சு விளக்கம்

பள்ளிக்கு வராததை மட்டும் வைத்து தன் அதிகாரத்தை சிறார் பாதுகாப்புச் சேவை பயன்படுத்த இயலாது: அமைச்சு விளக்கம்

2 mins read
42055a4c-aaa7-418a-8c81-8e8d43b839ba
நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பப்­பட்ட பல கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்­துப் பேசிய சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சுக்­கான மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் எரிக் சுவா, ஒரு மாண­வர் பள்­ளிக்கு வர­வில்லை என்­றால் அதற்கு இதர பல கார­ணங்­களும் இருக்­க­லாம் என்­றார். படம்: பிக்ஸாபே -

மாண­வர் ஒரு­வர் பள்­ளிக்கு வரா­ததை மட்­டும் வைத்­துக்­கொண்டு சிறார் பாது­காப்­புச் சேவை தனது அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்த இய­லாது என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு நாடா­ளு­மன்றத்­தில் விளக்­கம் அளித்தது.

அந்­தச் சேவை, சிறார், இளை­யர்­கள் சட்­டத்­தின்­கீழ் தன்­னு­டைய அதி­கா­ரங்­களைப் பயன்­படுத்­து­வ­தற்கு அது மட்­டுமே போது­மா­ன­தாக இராது என்று அமைச்சு கூறி­யது.

நாடா­ளு­மன்­றத்­தில் எழுப்­பப்­பட்ட பல கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்­துப் பேசிய சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சுக்­கான மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் எரிக் சுவா, ஒரு மாண­வர் பள்­ளிக்கு வர­வில்லை என்­றால் அதற்கு இதர பல கார­ணங்­களும் இருக்­க­லாம் என்­றார்.

கடந்த 2020ல் ஒரு 11 வயது சிறுமி மர­ணம் அடை­யும்வரை தாக்­கப்­பட்­ட­தாக, கொடு­மைப்­ ப­டுத்­தப்­பட்­ட­தாக தக­வல்­கள் வெளி­யா­யின. அதைத் தொடர்ந்து சிறார் கொடுமை சந்­தேக சம்­ப­வங்­கள் பற்­றிய புலன்­வி­சா­ர­ணை­க­ளுக்­கான நடை­முறை­கள் தொடர்­பில் உறுப்­பி­னர்­கள் நேற்று பல கேள்­வி­களை எழுப்­பி­னார்­கள்.

அந்­தச் சிறுமி 2020 ஆகஸ்ட் 26 முதல் 2020 அக்­டோ­பர் 28ஆம் தேதி வரை பள்­ளிக்­கூ­டத்­திற்­குப் போக­வில்லை.

சிறுமி பள்­ளிக்­கூ­டம் சென்­றால் அவர் கொடு­மைப்­ப­டுத்­தப்­பட்­டது பற்றி வெளியே தெரிந்­து­வி­டும் என்று அந்­தச் சிறு­மி­யின் தாயா­ரும் வளர்ப்புத் தந்­தை­யும் பயந்­தார்­கள்.

சிறார் கொடு­மைப் பற்றி புகார் தெரி­விக்­கப்­ப­டும்­போது அந்­தச் சிறா­ரின் பாது­காப்­புக்கு உட­ன­டி­யாக ஏதே­னும் ஆபத்து உண்டா என்­பது பற்றி சிறார் பாது­காப்­புச் சேவை­யைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் மதிப்­பி­டு­வார்­கள் என்று திரு சுவா கூறி­னார்.

அதி­கா­ரி­கள் பொது­வாக சிறா­ரி­டம் இருந்து, அவ­ரின் குடும்­பத்­தா­ரி­டம் இருந்து, நிபு­ணர்­க­ளி­டம் இருந்து தொலை­பேசி வழி அல்­லது காணொளி அழைப்­பு­கள் வழி தக­வல்­க­ளைப் பெறு­வார்­கள்.

அவற்றை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு ஒரு சம்­ப­வம் சிறார், இளை­யர்­கள் சட்­டத்­தின்­கீழ் வழக்­குத் தொடுக்­கும் அள­விற்கு இருக்­கி­றதா என்­பதை அவர்­கள் தீர்­மா­னிப்­பார்­கள்.

கொடு­மைக்கு ஆளான பிள்ளையை அதன் வீட்­டி­லேயே பாது­காப்­பாக விட்டு வைக்க இய­லாது என்­றால் மட்­டும் அதி­கா­ரி­கள் அந்­தப் பிள்­ளையை அதன் வீட்­டை­விட்டு வெளியே கொண்டு சென்­று­வி­டு­வார்­கள்.

சிறார் கொடு­மை­யின் தன்மையைக் கண்­டு­பி­டிப்­பது என்­பது அவ்­வ­ளவு எளி­தா­ன­தாக இராது என்று தெரி­வித்த திரு சுவா, சிறார் பாது­காப்­புச் சேவை அமைப்­பின் செய­லுக்கு ஆத­ரவு அளிக்­கும்­படி உறுப்­பி­னர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

குடும்ப வன்­செ­யல் புரிந்­துணர்வுப் பயிற்­சி­களில் கலந்­து­கொள்­ளும்­படி சிங்­கப்­பூர் மக்­களை அவர் வலி­யு­றுத்­தி­னார்.